Thursday, 19 July 2012

செவ்வாயிலிருந்து எடுக்கப்பட்ட மிகத்துல்லியமான புகைப்படங்களை


செவ்வாய்க்கிரகத்திலிருந்து எடுக்கப்பட்ட புத்தம் புதிய புகைப்படங்களை நாசா முதன்முறையாக வெளியிட்டுள்ளது.
செவ்வாய்க்கிரகத்தை ஆய்வு செய்வதற்கான நாசா அனுப்பிய இயந்திர ரோவர் அங்கு தரையிறங்கி இப்புகைப்படங்களை தனது 380 பாகை சுழலக்கூடிய சூப்பர் கெமராக்களால் படம்பிடித்துள்ளது. செவ்வாயில் சுமார் பில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றியதாக கருதப்படும் செம்மண்ணால் போர்த்தப்பட்ட எரிமலை குழிகள், இப்புகைப்படங்களில் தெளிவாக தெரிகின்றன.

குறித்த இயந்திர ரோவர், செவ்வாயில் 3,000 மார்டியன் நாட்கள் (8 வருடங்களும் 6 மாதங்களும்) தங்கியுள்ளதுடன், 15 வருடங்களுக்கு அங்கு தங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 1997ம் ஆண்டு ஜூலை 4ம் திகதி குறித்த Mars Pathfinder பூமியில் தரையிறங்கியது.

இப்புகைப்படங்கள் 2011 டிசம்பர் 21 - 2012 மே 8ம் திகதி கால எல்லைக்குள் எடுக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதம் நாசாவின் மற்றுமொரு ரோவர் செவ்வாயில் தரையிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment