Friday, 13 December 2013

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு…!!

994677_251309318364772_563741236_nதிகிலூட்டும் உண்மை.  கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் போல பரந்து விரிந்த ஏரி. ஆங்காங்கே மலைகள். பசுமையாக குட்டி குட்டியாக தீவுகள். சுற்றுலா பயணிகளை கவரும் சுவாரஸ்யம் ஏராளம் என்றாலும், அங்கு போகும் மனிதர்கள் திடீரென மாயமாகி விடுகிறார்கள்.
இந்த மர்ம தீவு பற்றிய விஷயங்கள் திகிலூட்டுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய பாலைவனக் கடல் என்று பெயர் பெற்ற “துர்கானா ஏரி” கென்யாவில் உள்ளது. ருடால்ப் ஏரி என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இந்த ஏரிக்கு, பல்வேறு நதிகளில் இருந்து நீர் வருகிறது. இங்கு நிலவும் கடும் வெப்பத்தால், ஒரு பகுதி ஆவியாகிறது.
மீதமுள்ள நீர்,  அதிக உப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. கென்யாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடங்களில் ஒன்றாக இந்த பாலைவனக் கடல் திகழ்கிறது.  குட்டி குட்டி தீவுகளும், பழமை மாறாத பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையும் கவர்ந்திழுக்கிறது. இந்த அட்ராக்ஷனோடு நம்மை உறைய வைக்கும் அதிர்ச்சிகளும் உள்ளன.
இங்குள்ள குட்டி தீவுகளில் ஒன்று “என்வைட்டினெட்”. இங்கு வாழும் பழங்குடியின மக்கள் பேசும் மொழி சொல்.  இதன் அர்த்தம் “திரும்ப வராது” என்பதாகும்.  என்வைட்டினெட் தீவுக்குள் செல்பவர்கள் யாரும் திரும்பி வருவது கிடையாதாம். அறிவியல் ஆராய்ச்சிகளுக்கே சவால் விடும் வகையில் இந்த தீவு உள்ளது.
முன்பொரு காலத்தில் இதில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர் என்றும் மீன் பிடிப்பது, வேட்டையாடுவது அவர்களின் தொழிலாக இருந்தது என்றும் பக்கத்து தீவுகளை சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். வியாபாரத்துக்காக பக்கத்து தீவுகளுக்கு வருவார்களாம். ஆனால் ஒரு காலத்துக்கு பிறகு தீவில் இருந்து வெளியே வரும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் யாரும் வராமல் போனதால் பக்கத்து தீவுகளில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து அந்த தீவுக்கு சென்றுள்ளனர். ஆனால் அப்படி சென்றவர்களும் திரும்பாமல் போகவே மர்ம தீவாக மாறியது என்வைட்டினெட்.
கடந்த 1935ம் ஆண்டு ஆங்கிலேய விஞ்ஞானி விவியன் பஸ் என்பவர் தன் குழுவினரோடு இந்த தீவு பற்றி ஆய்வுகள் மேற்கொண்டார். என்வைட்டினெட் குட்டித் தீவுக்கு இளம் விஞ்ஞானிகள் மார்டின் ஷெப்லிஸ், பில் டேசன் ஆகியோரை அனுப்பி வைத்தார் விவியன். நாட்கள்தான் போனதே தவிர விஞ்ஞானிகள் திரும்பியபாடில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆராய்ச்சியாளர்கள் தூரத்தில் இருந்தே ஆய்வுகளை செய்தனர்.
ஹெலிகாப்டரில் பறந்தபடியே வேவு பார்த்தனர். எந்த தடயமும் கிடைக்கவில்லை. பழங்குடியினர் குடிசைகள் அப்படியே இருந்தன. அழுகிய மீன்கள் சிதறிக் கிடந்தன. மனித நடமாட்டம் மட்டும் இல்லவே இல்லை.
இதையடுத்து பக்கத்து தீவுகளில் வசித்தவர்களிடம் தகவல்கள் சேகரித்தார். ‘அந்த தீவில் பிரமாண்ட ஒளி ஒன்று வரும். அப்போது இடத்தில் யார் இருந்தாலும் காணாமல் போய் விடுவார்கள். அப்படித்தான் அங்கிருந்தவர்கள் காணாமல் போயிருப்பார்கள்’ என்று பக்கத்து தீவுவாசிகள் கூறினர்.
பிரமாண்ட ஒளி வெள்ளம் எப்படி வருகிறது, அது மனிதர்களை எரித்து விடுகிறதா, அப்படி என்றால் எலும்புகளாவது மிஞ்சி இருக்க வேண்டுமே என்ற கேள்விகளுக்கு விவியனுக்கு விடை கிடைக்கவில்லை.
இந்த தீவுக்கும், வேற்றுக் கிரகவாசிகளுக்கும் தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் ஆராய்ச்சிகள் சூடு பிடித்துள்ளது.  இங்குள்ள மக்களை வேற்று கிரகவாசிகள் கடத்தி செல்கின்றனர் என்றும், கண்ணுக்குத் தெரியாத சக்கரம் ஒன்று சுழல்கிறது என்றும், மக்கள் காற்றில் கரைகின்றனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் மர்ம முடிச்சுகள் எதுவும் இன்னும் அவிழவில்லை.

Sunday, 29 September 2013

கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளியை பழமை மாறாமல் புனரமைக்க ஜமாத் நிர்வாகிகள் ஆலோசனை !

கீழக்கரையில் பழமை வாய்ந்த தொழுகைப் பள்ளிகளுள் நடுத்தெரு ஜும்மா பள்ளியும் ஒன்றாகும். கீழக்கரை நகரின் நடு நாயகமாக திகழும் இந்த கலை நயமிக்க கல் பள்ளியில் அழகும், கம்பீரமும் நிறைந்த, பூ வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள் பிரதானமாக காணப்படுகிறது. நூற்றாண்டுகளை தாண்டி நிற்கும் இந்த பள்ளியின் பல தூண்களில், தற்போது அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளியின் முகப்பில் இருக்கும் மினராக்களில் வெடிப்புகளும் தென்படுகிறது.


இதனால் நமக்கு கிடைத்த அரிய பொக்கிசமான இந்த பள்ளியை, மிக விரைவில் பழமை மாறாமல் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள, ஜமாத் நிர்வாகிகள் இடையேயான ஆலோசனை மற்றும் கலந்தாய்வு  நிகழ்ச்சி இன்று (29.09.2013) மாலை அஷர் தொழுகைக்குப் பின்னர், ஜும்மா பள்ளி வளாகத்தில் நடை பெற்றது. இதில் தொல்லியல் ஆய்வாளர் டாக்டர் ராஜா முஹம்மது அவர்கள் (சென்னை அருங்காட்சியகத்தின் முன்னாள் துணை இயக்குனர்) கலந்து கொண்டு,புனரமைப்பு செய்வது சம்பந்தமான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். 




இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நடுத் தெரு ஜும்மா பள்ளி மஹல்லியும், கீழக்கரை டவுன் காஜியுமான காஜி. A.M.M.காதர் பக்ஸ் ஹுசைன் சித்தீகி, ஜமாஅத் செயலாளர் ஹபீப் தம்பி, பொருளாளர் ஜமால் யூசுப், முன்னாள் செயலாளர் காதர் செய்யது இபுறாஹீம், ஜமாஅத் அங்கத்தினர்கள் ஜாபர் இபுறாகீம் (ஆனா சீனா), சிராங்கூன் டிராவல்ஸ் ஜுபைர் ஆகியோர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். 

Saturday, 17 August 2013

கீழக்கரை கைராத்துல் ஜலாலியா மேனிலைப் பள்ளியில் நடை பெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சி - கிழக்குத் தெரு ஜமாத்தார்கள் பங்கேற்பு !

கீழக்கரை கிழக்குத் தெரு கைராத்துல் ஜலாலியா மேனிலைப் பள்ளியில் இன்று (15.08.2013), காலை 9 மணியளவில், இந்திய தேசத்தின்  67 வது சுதந்திர தின விழா, பள்ளி வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் கிழக்குத் தெரு ஜமாஅத் அங்கத்தினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

 

இந்த நிகழ்ச்சிக்கு கிழக்குத் தெரு ஜமாத் தலைவர். ஜனாப். ப.அ. சேகு அபூபக்கர் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமையாசிரியர் ஜனாப். A. முஹம்மது மீரா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கைராத்துல் ஜலாலியா பள்ளியின் தாளாளர். பேராசிரியர். டாக்டர். ஜனாப். B.J.சாதிக் அவர்கள், பள்ளியின் கல்விக் குழு உறுப்பினர். ஜனாப். M.M.S.செய்யது இப்ராஹீம் அவர்கள், கல்விக் குழு உறுப்பினர். M.K.M.சுஐபு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். 


மேலும் மாணவிகள் ரோசன் சமீஹா, ஸ்மைலா மற்றும் மாணவர். அஜீத் மணிகண்டன் ஆகியோர்கள் இந்திய சுதந்திர தினம் குறித்து சிறப்பாக பேசினர். முன்னதாக மாணவர்களின் சுதந்திர தின விழா அணி வகுப்பு மரியாதயை பள்ளியின் தாளாளர். பேராசிரியர். டாக்டர். ஜனாப். சாதிக் அவர்கள் ஏற்றுக் கொண்டார். 



   

சமாதனப் புறாக்கள் பறக்கவிடப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளியின் முதுகலை ஆசிரியர் சா. சையது அபுதாகிர் அவர்கள் நன்றியுரை வழங்கினார். சுதந்திர தின விழா நாட்டுப் பண்ணுடன் இனிதே நிறைவடைந்து, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

தகவல்  : கீழக்கரை வரலாற்று ஆய்வாளர். ஆனா.மூனா சுல்தான் அவர்கள்

Sunday, 11 August 2013

மறுமை நாளின் அடையாளங்கள்.

1709. ‘கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப் படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” .
புஹாரி : 80 அனஸ் (ரலி).
1710. மறுமை நாளுக்கு முன் ஒரு காலக்கட்டம் வரும். அப்போது அறியாமை நிலவும்; கல்வி அகற்றப்பட்டு விடும்; ‘ஹர்ஜ்’ பெருகிவிடும். ‘ஹர்ஜ்’ என்பது கொலையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 7063 அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி).
1711. நபி (ஸல்) அவர்கள் ‘(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்து போய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். குழப்பங்கள் தோன்றும். ‘ஹர்ஜ்’ பெருகிவிடும்” என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அது என்ன (ஹர்ஜ்)?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘கொலைகொலை” என்று பதிலளித்தார்கள்.
புஹாரி : 7061 அபூஹுரைரா (ரலி).
1712. ‘நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்துவிட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கி விட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்’ என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.
புஹாரி : 100 அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி).

ன்னாள் அதிபர் சாவேஷின் கல்லறையில் தூங்கும் தற்போதைய வெனிசுலா அதிபர் Read more at: http://tamil.oneindia.in/news/2013/08/11/world-venezuelan-president-nicolas-maduro-says-he-sleeps-in-hugo-chavez-181031.html

கராகஸ்: மரணமடைந்த முன்னாள் அதிபர் சாவேஷின் கல்லறையில் படுத்து உறங்குவதாக அவரது தீவிர ஆதரவாளாரும், தற்போதைய வெனிசுலா அதிபருமான மதுரோ தெரிவித்துள்ளார். வெனிசுலாவின் அதிபரான ஹூகோ சாவேஷ் கடந்த மார்ச்சில் புற்று நோய் பாதிப்பினால் மரணாமடைந்தார். அதற்குப் பின்னர், அவரது ஆட்சியில் துணை அதிபராக பதவி வகித்த நிகோலஸ் மதுரோ, கடந்த ஏபரலில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானார். சாவேஷின் தீவிர ஆதரவாளரான மதுரோவை ஏற்கனவே தனது அரசியல் வாரிசாக அறிவித்திருந்தார் சாவேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.அதன்படி, சாவேஷ் வழியிலேயே தற்போது ஆட்சி நடத்தி வருகிறார் மதுரோ. ஏற்கனவே, முன்னாள் அதிபரான சாவேஷ் மரணமடைந்த பிறகு சிறிய பறவையாக மாறி தன்னைச் சுற்றி வருவதாக தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்த மதுரோ, தற்போது சில சமயங்களில் சாவேஷின் கல்லறை மீது படுத்துத் தூங்குவதாகக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார். முன்னாள் ராணுவ அருங்காட்சியகத்தில் புதைக்கப்பட்டுள்ள சாவேஷின் கல்லறை மீது படுத்து உறங்குவதாலேயே அவரின் எண்ணாங்கள் மற்றும் கருத்துக்கள் தனக்கும் உருவாவதாகவும், அதன் மூலமே தன்னால் பல நல்ல திட்டங்களை அமுல் படுத்தி ஆட்சி புரிய முடிவதாகவும் தெரிவித்துள்ளார் மதுரோ.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/08/11/world-venezuelan-president-nicolas-maduro-says-he-sleeps-in-hugo-chavez-181031.html

Monday, 29 April 2013

செளதி அரேபிய கருவூலத்தில் கேரள குடும்பத்துக்கு சொந்தமான ரூ. 5,000 கோடி!

திருவனந்தபுரம்: கேரள குடும்பத்துக்குச் சொந்தமான செளதி அரேபிய கரூவூலத்தில் உள்ள ரூ. 5,000 கோடியை மீட்க கேரள அரசு சிறப்பு அதிகாரியை நியமித்துள்ளது.
இது குறித்து கேரள மாநில சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் நசீகர் கூறியதாவது:
கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த கெயி குடும்பத்தினர் 136 ஆண்டுகளுக்கு முன் புனித மெக்கா நகரில் ஒரு இடத்தை வாங்கினர். அங்கு ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்காக ஒரு இருப்பிடத்தைக் கட்டினர்.
 kerala family may come into 900 million saudi bonanza

1950ம் ஆண்டு மெக்கா நகரை மேம்படுத்தவும், புனித யாத்ரீகர்களுக்கான தங்குமிடங்களை விரிவாக்கவும் கெயி குடும்பத்தினரின் இடத்தை செளதி அரசு கையகப்படுத்தியது. இதற்காக அந்தக் குடும்பத்தினருக்கு ரூ. 1.98 கோடியை (1.4 million Saudi riyals) நிவாரணமாக வழங்கியது.
இந்தப் பணம் செளதி அரேபிய கரூவூலத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பணத்தை கெயி குடும்பத்தினரால் பெற முடியவில்லை. இப்போது அந்தப் பணத்தின் மதிப்பு ரூ. 5,000 கோடியாகிவிட்டது.
செளதி சட்டப்படி இந்தக் குடும்பத்தினர் இந்தப் பணத்தைப் பெற்றால் அதை செளதியிலேயே தான் செலவு செய்ய முடியும். இந்தப் பணத்தை வைத்து புனிதப் பயணிகளுக்காக பெரிய அளவில் தங்குமிடம் கட்டித் தர முடியும்.
2001ம் ஆண்டு முதல் கெயி குடும்பத்தினர் இந்தப் பணத்தை செளதி கருவூலத்தில் இருந்து பெற முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். ஆனால், அதைப் பெற முடியவில்லை. இதையடுத்து இது குறித்து கெயி குடும்பத்தினருக்கு உதவ அப்போதைய கேரள முதல்வராக இருந்த ஏ.கே.ஆண்டனி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இப்போதைய உம்மன் சாண்டி அரசும் இந்த விஷயத்தில் மத்திய அரசு- செளதி அரசுடன் பேச ஒரு சிறப்பு அதிகாரியையும் நியமித்துள்ளது.
இவ்வாறு நசீர் கூறினார்.
இந்த விவகாரத்தையே நசீர் தனது பி.எச்டி படிப்புக்கான கருவாக வைத்து ஆய்வறிக்கையும் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கீழக்கரை கைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளியில் 18 ஆண்டுகள் பணியாற்றிய தாளாளருக்கு 'பிரிவு உபசார விழா' - ஜமாத்தார்கள், சமூக நல அமைப்பினர்கள், பங்கேற்பு !


கீழக்கரை கிழக்குத் தெரு, கைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளியில் 1995 ஆம் ஆண்டு முதல், நேற்றைய தேதி வரை, ஏறத்தாழ 18 ஆண்டு காலங்கள், தொடர்ச்சியாக பள்ளி தாளாளராக, சிறப்பாக பணியாற்றிய  ஜனாப்.செய்யது இபுறாஹீம் (ஸ்டேசன் மாஸ்டர் - ஓய்வு) அவர்களுக்கான பிரிவு உபசார விழா நேற்று (27.04.2013) சனிக் கிழமை மாலை 4.30 மணியளவில் கைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடை பெற்றது. 



இந்த சிறப்பான விழாவிற்கு கிழக்குத் தெரு ஜமாஅத் தலைவர். ஜனாப். ப.அ. சேகு அபூபக்கர் சாகிபு காக்கா, கல்விக் குழு பொறுப்பாளர் ஜனாப். சுஐபு காக்கா,  கீழக்கரை இஸ்லாமிய பைத்துல்மால் பொறுப்பாளர். ஜனாப்.முஹைதீன் தம்பி காக்கா, கைராத்துல் ஜலாலியா மேனிலைப் பள்ளியின் தாளாளர். முனைவர்.சாதிக் காக்கா, சதக்கத்துன் ஜாரியா நடுநிலை பள்ளியின் தாளாளர். ஜனாப்.ஜமாலுதீன் காக்கா, பள்ளியின் புதிய தாளாளர் ஜனாப். ஜவஹர் சாதிக் காக்கா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.


இந்த விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர். திரு.சுரேஷ் குமார் வரவேற்புரை ஆற்றினார். கீழக்கரை நகர் நல இயக்கத்தின்   செயலாளர் ஜனாப். பசீர் அகமது,  நுகர்வோர் சேவை இயக்கத்தின் செயலாளர். திரு. தங்கம் இராதா கிருஷ்ணன், பள்ளியின் ஆசிரிய பெருந்தகைகள் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். மேலும் கீழக்கரை நகர் நல இயக்கத்தின் பொருளாளர் ஜனாப்.ஹாஜா அனீஸ், நிர்வாகி திரு. விஜயன், மக்கள் நல பாதுகாப்புக் கழக பொருளாளர் ஜனாப். முஹம்மது சாலிஹ் ஹுசைன், கிழக்குத் தெரு ஜமாஅத் நிர்வாகிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஜனாப்.செய்யது இபுறாஹீம் அவர்கள் சதர்ன் இரயில் வேயில், தமிழ் நாடு, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் 36 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.  மேலும் சதர்ன் இரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டராக பணியாற்றிய காலத்தில் விபத்துகளே இல்லாமல் மகத்தான சேவை புரிந்தமைக்காக  இரயில்வே அமைச்சரின் கைகளால் விருது, ரொக்கப் பரிசு, பாராட்டிதழ் போன்றவை பெற்று இருக்கிறார். தற்போது இவர்கள் அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் கூட, இளமை துடிப்போடு, எந்நேரமும்  'எறும்பு போல்' சுறுசுறுப்பாகவும்,   நேரம் தவறாமையை தன் வாழ்வில் கடை பிடித்து வருகிறார்.

கீழக்கரை நகரின் சமூக நலனில் அக்கறை கொண்ட  இந்த 86 வயதை கடந்த  இளைஞர், தன் ஓய்வு நேரம் முழுவதும் பொது நல பணிகளுக்காக தன்னை அர்பணித்து வருகிறார். இப்போது கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவராக தலைமையேற்று சேவை ஆற்றி வருகிறார். ஏற்கனவே நுகர்வோர்களுக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கீழக்கரையில் நுகர்வோர் சேவை இயக்கம் ஒன்றை உருவாக்கி, பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். 

இறைவன் அருளால், இளைஞர். ஜனாப்.செய்யது இபுறாஹீம் அவர்கள் இன்னும் பல்லாண்டு காலங்கள், நீண்ட ஆயுளுடனும், சரீர சுகத்துடனும் வாழ்ந்து, அவர்களின் சமூகப் பணிகள் செழித்தோங்க, கீழை இளையவன் வலை தளம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமை அடைகிறது.

Tuesday, 16 April 2013

ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் மிக பயங்கர நிலநடுக்கம்: 40 பேர் பலி

தெஹ்ரான்: ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் இன்று மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.8 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் டெல்லி, குர்காவ்ன் உள்ளிட்ட இந்தியாவின் வட பகுதிகளும், பாகிஸ்தானும், வளைகுடா நாடுகளும் குலுங்கின.
இன்று மாலை 4.14 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு 8 ரிக்டர் புள்ளிகளாக இருந்ததாக அமெரிக்க நிலவியல் மையம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் இது 7.6 முதல் 7.8 புள்ளிகளாக இருந்ததாக ஈரான் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஈரானில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. 40 பேர் வரை பலியாகிவிட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பலி எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
 earthquake at iran pakistan border tremors felt

டெல்லி, குஜராத், சண்டீகர் குலுங்கியது...
இந்தியாவில் இந்த நிலநடுக்கம் டெல்லி, குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர், உத்தரப் பிரதேசம், சண்டீகர் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் உணரப்பட்டது. இங்கு வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.
கராச்சி, ராவல்பிண்டி, குவெட்டா, இஸ்லாமாபாத்...
அதே போல பாகிஸ்தானின் கராச்சி, ராவல்பிண்டி, குவெட்டா, இஸ்லாமாபாத், ஹைதராபாத் ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. அதே போல ஆப்கானிஸ்தானின் காண்டஹார் பகுதியும் இந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்தது.
துபாய், ஷார்ஜா, அஜ்மான்...
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் வளைகுடா நாடுகளிலும் உணரப்பட்டது. துபாய், ஷார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட‌ அமீர‌க‌த்தின் ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் நில‌ந‌டுக்க‌ம் உண‌ர‌ப்ப‌ட்ட‌து. அமீர‌க‌த்தின் ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் வ‌சித்து வ‌ரும் ம‌க்க‌ள் த‌ங்க‌ள் க‌ட்டிட‌த்தை விட்டு தெருக்க‌ளில் காத்திருந்த‌ன‌ர்.
அரைம‌ணி நேர‌ம் க‌ழித்து த‌ங்க‌ள‌து இருப்பிட‌ங்க‌ளுக்கு திரும்பின‌ர்.
பஹ்ரைன், கத்தாரிலும்...
அதே போல பஹ்ரைனிலும் கத்தாரிலும் நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்தன. இதையடுத்து அபுதாபி உள்ளிட்ட பகுதிகளில் உயரமான கட்டடங்களில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலநடுக்கம் தெற்கு ஈரான்-பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண எல்லையில் கஷ் என்ற பகுிதியில் மையம் கொண்டிருந்தது. நிலத்துக்கு அடியில் 15.2 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 9ம் தேதி தான் ஈரானை 6.1 ரிக்டர் புள்ளிகள் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதும் அதில் 37 பேர் பலியானதும் நினைவுகூறத்தக்கது.
நிலநடுக்கத்தின் தாக்கத்தை விவரிக்கும் படம்:
கீழே உள்ள படம் அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள படமாகும். இதில் நிலநடுக்கத்தின் தாக்கத்தின் அளவு விவரிக்கப்பட்டுள்ளது.

போலியோ மருந்து கண்டுபிடித்து ஊனத்தை ஒழித்த விஞ்ஞானி ஹிலாரி கோப்ரோவ்ஸ்கி!

பிலடெல்பியா: போலியோ சொட்டு மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானி ஹிலாரி கோப்ரோவ்ஸ்கி இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 96.
பிறக்கும் போது ஊனமாக பிறந்துவிட்டால் விதியே என்று விட்டுவிடலாம். ஆனால் சுகமாக பிறந்து நன்றாக ஓடி ஆடி விளையாடிய பிள்ளைகள் திடீரென நோய் தாக்கி நடக்க முடியாமல் ஊனமடைவது என்பது தாங்க இயலாத துயரம். இந்த துயரத்திற்கு முடிவு கட்டும் வகையில் சொட்டு மருந்து ஒன்றினை கண்டுபிடித்தார் ஹிலாரி கோப்ரோவ்க்ஸ்கி.