Saturday, 22 December 2012

கீழக்கரை மகளிர் கல்லூரிக்கு ச‌ர்வ‌தேச‌(ஐஎஸ்ஓ) தரச் சான்றிதழ்

photo by tbakcw

கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி வெள்ளிவிழா ஆண்டான நடப்பாண்டில் ( International Organization for Standardization )சர்வதேச தரக்குழுவினரின் தரச்சான்று பெற்றுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் சுமையா கூறுகையில்,

‘சர்வதேச வலையமைப்பு மற்றும் ஆஸ்திரிய தரச் சான்றிதழ் அமைப்பு குழுவினர் கல்லூரிக்கு வ‌ருகை த‌ந்த‌ன‌ர். கல்லூரியின் இளங்கலை மற்றும் முதுகலை வகுப்புகளுக்குரிய பாடத்திட்டம் வடிவமைத்தல் மற்றும் பட்டம் வழங்குதலையும், ஆராய்ச்சி திட்டங்களையும் ஆய்வு செய்தனர்.
மேலும் சான்றிதழ் மற்றும் பட்டய படிப்பு மேம்பட்ட பட்டயம் முதுநிலை பட்டய படிப்புகளுக்குரிய கலை அறிவியல், மனிதநேயம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வகுப்புகளுக்குரிய பாடத்திட்டம் செயல்படுத்தி பராமரிக்கப்பட்டு வருவதையும் ஆய்வு செய்தனர். இதையடுத்து கல்லு�ரியின் வெள்ளிவிழா ஆண்டான நடப்பாண்டிலேயே ஐ.எஸ்.ஓ. 9001&2008 சான்றிதழ் வழங்கியுள்ளனர்’ என்றார்.

Saturday, 15 December 2012

ராம்னிக்கு வெள்ளை மாளிகையில் விருந்தளித்த ஒபாமா!

வாஷிங்டன்: தன்னை எதிர்த்து அதிபர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியுற்ற மிட் ராம்னிக்கு, அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் விருந்து கொடுத்தார்.
 obama meets romney cliff talks falter
நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஒருவர் மீது ஒருவர் சளைக்காமல் கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கியவர்கள், இன்று ஒரே மேசையில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர். முன்னதாக, வெள்ளை மாளிகைக்கு வருமாறு ஒபாமா, ராம்னிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அழைப்பை ஏற்றுக்கொண்ட ராம்னி நேற்று, கறுப்பு நிற எஸ்.யூ.வி யில், எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், தனியாக வந்திருந்தார். கார் கதவைக்கூட தானே திறந்து, மூடிக்கொண்டார். வெள்ளை மாளிகையின் மேற்கு பகுதியில் உள்ள அறையில், தெற்கு பகுதியில் உள்ள புல்வெளியை பார்க்கும் வண்ணம் அமர்ந்து இருவரும் உணவருந்தினர். ஒபாமாவும் ராம்னியும் சுமார் 70 நிமிடங்கள் தனியாக பேசிக்கொண்டனர்.
ஒபாமாவுக்கு ராம்னி வாழ்த்து
மீண்டும் வெற்று பெற்று அதிபர் ஆகியுள்ள ஒபாமாவுக்கு தேர்தல் வெற்றிக்காகவும், அடுத்த நான்கு ஆண்டுகள் ஆட்சிக்காகவும் கவர்னர் ராம்னி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் என வெள்ளை மாளிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
இருவரும் தொடர்பில் இருந்து கொள்ள விரும்புவதாகவும், இருவருக்கும் விருப்பமான விஷயங்களில் இணைந்து பணியாற்றும் வாய்ப்புகளை அறிந்து கொள்ள ஆவலாக இருப்பதாகவும், மேலும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
ராம்னிக்கு பதவி கிட்டுமா?
ராம்னியின் சில கொள்கைகள் தமக்கு ஏற்புடையதாக இருப்பதாகவும், அவரை சந்தித்து பேசுவதற்கும், வாய்ப்பு இருந்தால் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும், வெற்றி பெற்ற பின்னர் ஒபாமா தெரிவித்திருந்தார். அதை நிறைவேற்றும் வகையில் நேற்று முதல் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
குறிப்பிட்ட எந்த திட்டங்களுடனும் பேச்சு வார்த்தைகள் நடைபெறவில்லை என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்து இருந்தாலும், அடுத்தடுத்த சந்திப்பிற்கான முன்னோட்டமாகவே இது கருதப்படுகிறது.
தன்னை எதிர்த்து உட்கட்சி தேர்தலில் தீவிரமாக போட்டியிட்ட ஹிலாரி க்ளின்டனை, தனது பிரதான அமைச்சராகவும், இன்னொருவரான ஜோ பைடனை துணை அதிபராகவும் அமர்த்திக் கொண்டவர் ஒபாமா. கூடுதலாக எதிர்க்கட்சியை சார்ந்தவர்களையும் தனது அமைச்சர்களாக வைத்துக் கொண்டுள்ளார்.
அந்த வகையில் ராம்னிக்கு ஏதாவது முக்கிய பதவியைத் தர ஒபாமா விருப்ப்படுவதாக தெரிகிறது. ஒபாமா - ராம்னி யின் முதல் சந்திப்பு அந்த எதிர்ப்பார்ப்புகளை அதிகரிக்க வைத்துள்ளது.
தேக்க நிலையை தடுக்க ராம்னி உதவுவாரா?
இன்னொரு பக்கம், 'ஃபிஸ்கல் க்ளிஃப்' எனப்படும் பொருளாதார தேக்கநிலை அபாயத்தை தடுப்பதற்காக, குடியரசுக் கட்சி தலைவர்களுடன் ஒபாமாவின் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஒபாமாவும் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஜான் பேனருடன் பேசிக்கொண்டிருக்கிறார்.
250 ஆயிரம் டாலர்களுக்கு அதிகமாக வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரியை அதிகரிக்க வேண்டும். 200 ஆயிரம் டாலர் வரை வருமானம் உள்ளவர்களுக்கு பழைய நிலை நீடிக்க வேண்டும் என்று ஒபாமா வலியுறுத்துகிறார்.
குடியரசுக் கட்சியினரோ, பணக்காரர்களுக்கும் வருமான வரியை உயர்த்தக்கூடாது என்று அடம் பிடிக்கின்றனர். இரு கட்சியினருக்கும் உடன்பாடு ஏற்படுவதற்கு ராம்னியும் உதவுவாரா என்ற எதிர்ப்பார்ப்புகளும் எழுந்துள்ளன.
தேர்தலில் நேருக்கு நேர் ஒருத்தரை ஒருத்தர் கடுமையாக சாடிக்கொண்டாலும், தேர்தல் முடிவுகள் வெளிவந்து ஒரு மாதத்திற்குள்ளாகவே இருவரும் ஒன்றாக விருந்துண்ணும் காட்சி அமெரிக்க அரசியலில் சாதாரணமே என்றாலும், ஒபாமா ஒரு படி மேலே போய் யாரையும் பகையாக நினைக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். தொடர்ந்து அவர்களுடன் இணைந்து பணியாற்றி, திறமையை பயன்படுத்திக் கொள்ளவும் செய்கிறார். அந்த வகையில் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியும் ஒபாமாவும் ஒரே கொள்கையுடைவர்கள் என்று சொல்லலாம்.
'எதிரியாக இருந்தாலும் வீட்டுக்கு வந்தா ஒரு வாய் காப்பித் தண்ணி கொடுப்பது தான் தமிழர் பண்பாடு' என்று சொல்லப்படும் தமிழகத்தில் இப்படி ஒரு விருந்தோம்பல் காட்சியை காண முடியாதா? என்ற ஏக்கமும் வரத்தான் செய்கிறது.

Wednesday, 5 December 2012

தினசரி 6000 அடி நடங்க ஆரோக்கியமா இருக்கலாம்!

தினசரி 6000 அடிகள் நடக்கும் பெண்களுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம், இதயநோய்கள் ஏற்படாது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
walk 6 000 steps daily a healthier life
பெண்கள் மெனோபாஸ் பருவத்தை எட்டிய உடனே நீரிழிவு தொடங்கி இதயநோய்கள், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அழையா விருந்தாளிகளாக வந்து குடியேறிவிடுகின்றன. உடல் நோய்களோடு மனஅழுத்தமும் சேர்ந்து பெண்களை பாடாய் படுத்திவிடும். உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இந்த நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.

இதேபோல் மெனோபாஸ் காலத்தை எட்டிய பெண்களின் நலனுக்காக பிரேசில் நாட்டில் நாட்டில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 45 வயது முதல் 72 வயதுடைய 292 பெண்கள் பங்கேற்றனர். அவர்களின் உடல் எடை பரிசோதிக்கப்பட்டது. அடி வயிறு கொழுப்பு, ரத்த சர்க்கரை ஆகியவை கணக்கெடுக்கப்பட்டன. பின்னர் ஆய்வில் பங்கேற்ற பெண்களை தினசரி 6 ஆயிரம் அடிகள் நடக்குமாறு பணிகள் கொடுக்கப்பட்டன.
4 வாரங்களுக்குப் பின்னர் அவர்களின் உடல் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் நோய்களான நீரிழிவு, இதயம் தொடர்பான நோய்கள் பாதிப்பு ஏற்படுவது குறைந்து இருந்தது. அவர்களின் ஹார்மோன் சுரப்பும் சீராக இருந்தது தெரியவந்தது.
இதன்மூலம் நன்றாக நடந்து ஓடி ஆடி வேலைபார்க்கும் பெண்களுக்கு நோய்கள் ஏற்படுவது குறைகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உட்கார்ந்த நிலையிலேயே இருக்கும் பெண்களுக்குத்தான் நோய் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. எனவே தினசரி 6000 அடி நடப்பவர்கள் நோய்களில் இருந்து தப்பிவிடுகிறார்கள் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

Tuesday, 4 December 2012

7 மில்லியன் தோமஸ் சங்காராக்கள் வாழ்ந்த நாடு அது!


இருண்ட கண்டம் என அழைக்கப்படும் ஆபிரிக்காவில், 1980 களில் ஒரு நாடு மட்டும் அசுர வேகத்தில் ஒளிவீசத்தொடங்கியது.
அந்த நாட்டின் பெயர் புர்கினா ஃபசோ (Burkina Faso). ஒளிவீச காரணம் கேப்டன் தோமஸ் சங்காரா (Thomas Isidore Noël Sankara). இன்று அவன் உயிருடன் இருந்திருந்தால், ஆபிரிக்காவில் முதல் அபிவிருத்தி அடைந்த நாடாக தோற்றம் பெற்றிருக்கும் புர்கினோ ஃபசோ.
இளம் புரட்சிகர தலைவனாக, ஏகாபத்திய எதிர்ப்பாளனாக ஆபிரிக்க மக்களிடையே அடையாளம் காணப்பட்ட தோமஸ் சங்காராவுக்கு மூன்றாம் உலகம் சூட்டிய பெயர் 'ஆபிரிக்காவின் சே குவாரா'.

1983ம் ஆண்டு இராணுவ புரட்சி நடவடிக்கை ஒன்றின் மூலம் Burkino Faso நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தோமஸ் சங்காரா கைப்பற்றினான். ஆட்சிக்கு வந்ததும் அவன் கொண்டுவந்த முற்றிலும் மாறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் புர்கினோ ஃபாசோ நாட்டு மக்களுக்கு புதிய உற்சாகத்தை தந்தன. இருண்ட கண்டத்தின் ஓர் இருண்ட கரும்புள்ளியிலிருந்து புறப்பட்ட தீக்குச்சி பிளம்பு போல் பிரகாசிக்க தொடங்கியது அச்சிறிய நாடு. தனித்துவமான பேச்சுவல்லமை. கடுமையான உழைப்பு. தன் மக்களுக்காக எதையும் செய்ய துணியும், மற்றவர்களை செய்யவைக்கும் மனநிலையை உருவாக்கும் நேர்மறை சிந்தனை என்பன ஆபிரிக்க மக்களை அ(வ)ன்பால் கட்டிப்போட்டது. தோமஸ்  சங்காரா

குறிப்பாக 1984ம் ஆண்டு அக்டோபர் 4ம் திகதி நியூயோர்க்கின் ஐ.நா முன்றலில் தோமஸ் சங்காரா தனது புர்கினோ ஃபாசோ நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி உரையாற்றிய உரை அதிமுக்கியம் வாய்ந்தது. 'நான் இங்கு இருக்கும் அனைவரிடமும் பேச விளைகின்றேன். காரணம் நான் மனிதன். மனிதாக இருப்பவர்கள் எவரும் எனக்கு அன்னியமானவர்கள் அல்ல' என தொடங்கியது அவனது உரை.

ஏழ்மை, வறுமை என்பவற்றை காரணம் காட்டி, தாம் ஆபிரிக்க நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகள் செய்கிறோம் எனும் மார்தட்டிக்கொள்ளும் சர்வதேச நாடுகளை முற்றாக புறக்கணித்த தோமச் சங்கார, தனது சொந்த நாட்டு மக்களின் ஆற்றலைத் திரட்டி நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபடத்தொடங்கினான். Upper Volta என பிரெஞ்சு மொழி பெயரால் அழைக்கப்பட்ட நாட்டை Burkino Faso என பெயர் மாற்றம் செய்தான். நேர்மையான  மனிதனின் தேசம் என்பது அதன் பொருள்.

அவன் ஆட்சிக்கு  வந்த போது வயது 33. அப்போது அந்த நாடு பிரெஞ்சு காலனித்துவ ஆதிக்கத்திலும் ஊழல் நிறைந்த நாடாகவும் இருந்தது. தோமஸ் சங்காரா ஆட்சிக்கு வந்ததும் ஊழலை முடிவுக்கு கொண்டுவர புதிய  நடைமுறைகளை அறிமுகப்படுத்தினான். தன் நாட்டின் நாட்டின்  அனைத்து நில மற்றும் தாது  வளங்களை தேசியச் சொத்தாக்கினான். நாட்டின் கடன் சுமையை முற்றாக குறைக்க தொடங்கினான். சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும்  உலக வங்கி ஆகியனவற்றின் தன்  நாட்டின் மீதான செல்வாக்கை படிப்படியாக பலமிழக்க செய்தான். உங்கள் நாட்டில் விதைக்கும் நாடுகளே, உங்களை கட்டுப்படுத்தி ஆழ்கின்றன என பொதுமக்களிடம்  எடுத்துரைத்தான்.
அனைத்து குழந்தைகளுக்கும் கல்விக்கு முதலில் முன்னுரிமை அளித்து தேசிய அளவிலான எழுத்தறிவு பிரச்சாரத்தை தொடக்கினான். விவாசயத்தில் தாம் தன்னிறைவு காண்பதற்கு புதிய நெறிமுறைகளை வகுத்தான். நில சீர்த்திருத்தை கொண்டுவந்தான்.  மூளைக்காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல், தட்டம்மை ஆகியவற்றுக்கு எதிராக 2.5 மில்லியன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை 15 நாளில் செய்து முடித்தான்.
பாலைவனமாகிக் கொண்டிருந்த சாஹெல் எனும் நிலப்பகுதியில் 10 மில்லியன் மரம் நடும் திட்டத்தை தொடக்கினான்.  நில பிரபுத்துவ நில உரிமையாளர்களிடமிருந்து நிலத்தை பெற்று விவசாயிகளுக்கு அவற்றை வழங்கினான். கோதுமை உற்பத்தியை இரட்டிப்பதற்காக அவன் மேற்கொண்ட இந்த முயற்சியின் பயனாக ஒரு ஹெக்டேருக்கு 1700 கிலோ கிராம் எனவிருந்த கோதுமை உற்பத்தி, மூன்று வருடத்தில், ஒரு ஹெக்டேருக்கு 3800 கிலோ கிராம் என அதிகரித்தது. உணவு உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு அடைய வைத்தது.  கிராமப்புறங்களில்  தேர்தலுக்கான வரிமற்றும் உள்நாட்டு வரிகள் இடைநீக்கிவிட்டு, ரயில் மற்றும் சாலை கட்டுமான திட்டத்தை உருவாக்கினான்.
ஒவ்வொரு கிராமத்திலும், மருத்துவ வைத்தியசாலை கட்டிடம் அமைக்கப்படவேண்டும் என கட்டளையிட்டான். உங்களது சொந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி, பாடசாலைகளை கட்டுமாறு 350 கிராம சேவக நிலையங்களுக்கு உத்தரவிட்டான்.

பெண்களின் பாலியல் ரீதியாக துன்புறுத்தவர்கள், கட்டாய திருமணம் செய்வோர், பலாத்காரம் செய்வோரை நாடுகடத்த தொடங்கினான். பெண்களுக்கு நேரடியாக அமைச்சரவை பொறுப்புக்கள் அளித்து வீடுகளை விட்டு வெளியில் அவர்கள் வேலை செய்வதை ஊக்குவித்தான். நிறைமாத காலத்தில்,  பாடசாலையில் தங்கியிருந்து கல்வி கற்றுக்கொடுக்க பெண் ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கினான். ஒவ்வொரு அரச பணியாளனும் தனது ஒரு மாத சம்பளத்தை, பொது மக்கள் திட்டத்திற்கு என வழங்க வேண்டும் என்று கட்டாய உத்தரவிட்டான். கியூபாவின் புரட்சித்தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவை முன்மாதிரியாக கொண்டு, தனது நாட்டிலும், கியூபன் ஸ்டைல் புரட்சிப்பாதுகாப்பு கமிட்டிக்குழுவை அமைத்தான்.

உவகாடுகு எனும் நாட்டின் தலைநகரில் இருந்த இராணுவ ஆயுத களஞ்சிய சாலையை, மாநிலத்துக்கு சொந்தமான சூப்பர்மார்க்கெட்டாக உருவாக்கினான். நாட்டின் முதலாவது சுப்பர்மார்கெட் அது.

புர்கினோ ஃபசோ
ஆட்சியிலிருந்த போது, உலகின் மிக குறைவான சொத்துடைய, ஏழ்மையான நாட்டு ஜனாதிபதி எனும் பெயரையும், மிக குறைந்த சம்பளம் பெறும் நாட்டு ஜனாதிபதி எனும் பெயரையும் பெற்றான். அவனது மாத சம்பளம் 450 அமெரிக்க டாலர்கள் தான். அதுவும், தன்னிடமிருந்த கார், நான்கு மோட்டார் சைக்கிள்கள், மூன்று கிட்டார்கள், உடைந்த குளிர்சாதன பெட்டி என்பவற்றை பராமரிப்பதற்காகத்தான் அந்த சம்பளத்தையும் பெற்றுக்கொண்டான்.  அரசியல் அந்தஸ்து காரணமாக பரிந்துரைக்கப்பட்ட எந்தவொரு உயர் சொத்தையும், அவன் தன்னுடயதாக்கவில்லை.

கிட்டார் வாசிப்பதிலும், காற்பந்து விளையாடுவதிலும் அதிக நாட்டம் கொண்ட தோமஸ் சங்ககார நாட்டிற்காக புதிய தேசிய கீதமொன்றையும் தனது கிட்டார் இசை மூலம் உருவாக்கியிருந்தான்.

ஒரு முறை ஏனைய ஆபிரிக்க தலைவர்கள், 'ஏன் இந்த நாட்டில், உங்களது புகைப்படங்கள் ஏதும் பொதுவிடங்களில் வைக்கப்படுவது இல்லை' என கேள்வி எழுப்பபிய போது தோமஸ் சங்காரா  அளித்த பதில், 'காரணம், எனது நாட்டில் 7 மில்லியன் தோமஸ் சங்காராக்கள் உள்ளனர்'.

அவன் சொன்னது உண்மைதான். தோமஸ் சங்காராவின் வழியில் ஏராளமான இளைஞர்கள் அணி திரண்டனர். ஆனால் நாட்டை ஏழ்மை நிலையிலிருந்து மெல்ல மெல்ல மீட்டு வந்தவனுக்கு பகைமை வேறு வடிவில் வரத்தொடங்கியது. அவனது கொள்கைகள் நடுத்தர வர்க்கத்தினரின் சுகபோகங்களை கட்டாயமாக கைவிடச்செய்தன. பழங்குயிடினத்தவரின் பாரம்பரிய உரிமைகள், சொத்துக்கள் பறிக்கப்பட்டு பொதுச்சொத்துக்கள் ஆகின. அனைவரையும் மீண்டும் உழைக்க  பணிக்கப்பட்டனர். இதனால் நடுத்தர வர்க்கத்தினரும், பழங்குடியினரும் தோமஸ் சங்காராவுக்கு எதிராக திசைதிருப்பட்டனர்.

பிரான்ஸ் நாட்டின் நிதிமுதலீடுகளையும் காலப்போக்கில் சங்காரா புறக்கணிக்க தொடங்கியதால்,  பிரான்ஸும், ஐவரி கோஸ்டும் தோமஸ் சங்காராவின் ஆட்சி மீது மறைமுக பகைமை கொள்ளத்தொடங்கின.

தோமஸ்  சங்காரா
முடிவு; 1987ம் ஆண்டு அக்டோபர் 15ம் திகதி தோமஸ் சங்காரா திடீர் ஆட்சிக்கவிழ்ப்பு சதிப்புரட்சி (Coup d'état) ஒன்றினால் படுகொலை செய்யப்படுகிறான்.  பிரான்ஸ், அமெரிக்காவின் மறைமுக உதவியுடன், தோமஸ் சங்காராவின் நெருங்கிய நண்பன் Blaise Compaoré வினால் இந்த சதிப்புரட்சி மேற்கொள்ளப்பட்டது.   இன்றைய புர்கினோ ஃபசோ நாட்டின்  அதிபர், தோமஸ் சங்காராவின் படுகொலைக்கு காரணமான அவனது நண்பனே.

இதில் குறிப்பிடத்தக்கது, இராணுவ புரட்சி மூலம் புர்கினோ ஃபசோ  நாட்டின் பதவியை கைப்பற்றுவதற்கு தோமஸ் சங்காராவுக்கு உதவியதும் இதே Blaise Compaoré தான்.  தான் கொல்லப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தோமஸ் சங்காரா  நிகழ்த்திய உரை ஒன்றில் கூறிய வசனங்கள் 'புரட்சிகளை முன்னின்று நடத்தும் தனிப்பட்ட புரட்சியவாதிகள் கொல்லப்படலாம். ஆனால் உங்களால் அவர்களது சிந்தனைகளை கொல்ல முடியாது'.

அவன் கூறியது போன்றே, ஆபிரிக்காவின் சே குவாராவாக அனைத்து ஆபிரிக்க மக்களின் மனங்களிலும் உயிர் வாழ்ந்து வருகிறான். 20ம் நூற்றாண்டின் தலைசிறந்த ஆபிரிக்க புரட்சியவாதியுமாக அடையாளப்படுத்தப்படுகிறான். தோமஸ் சங்காரா கொல்லப்பட்டதும் உடனடியாக புர்கினோ ஃபசோ நாடு ஆபிரிக்காவின் மற்றுமொரு இருண்ட தேசமாக மீண்டும் மாறிவிட்டது.   உலக  வங்கியிடமும், ஐ.நாவிடமும் சர்வதேச உதவிகளுக்காக கையேந்தும் நாடாகிப்போனது.

 அவன் இறந்த பின்னர் நாட்டின் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு உடனடியாக ஆட்சிப்பொறுப்பை கைப்பற்றிய Blaise Compaoré, தோமஸ் சங்காராவின் உடலை மிகச்சாதாரணமாக ஒதுக்குப்புற கிராமப்புறமொன்றில் புதைத்து விடுகின்றான்.  இன்று வரை தோமஸ் சங்காரா பற்றி புர்கினோ ஃபசோ பற்றி அந்நாட்டுக்குள் யாரும் வெளிப்படையாக கருத்துப்பகிர்வதற்கு சுதந்திரம் மறுக்கப்படுகிறது. Blaise Compaoré

கடந்த ஏப்ரல் மாதம், சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் சர்வதேச டாக்குமெண்டரி திரைப்பட விழா நடைபெற்றது. இதில் சுவிற்சர்லாந்தின் Christophe Cupelin என்பவர் உருவாக்கிய கேப்டன்  தோமஸ் சங்காரா (Captain Thomas Sankara) எனும் டாக்குமெண்டரி திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது.

முப்பதுக்கும் குறைவான பெரியவர்கள் மட்டுமே திரைக்கு முன்னாள் கூடியிருந்தனர்.  நிகழ்ச்சி நிரல் அட்டவணையில் 'ஆபிரிக்காவின் சேகுவாரா' என வர்ணித்து எழுதப்பட்ட  இரட்டைச் சொல்லே நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டிற்று. கடந்த சில தினங்களுக்கு முன்னர் லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் சுவிற்சர்லாந்து படைப்பாக இந்த டாக்குமெண்டரி காட்சியிடப்பட்டது.

ஏற்கனவே தோமஸ் சங்ககாராவை பற்றி பல டாக்குமெண்டரிகள் வெளிவந்துள்ளன.  யூடியூப் வலைத்தளத்தில் அவனது தனித்தனி உரைகளும் பல பதிவேற்றப்பட்டுள்ளது. எனினும் தற்போது Christophe Coupelin உருவாக்கியுள்ள டாக்குமெண்டரி அவை அனைத்திலும் மிக நேர்த்தியான, சுருக்கமான, தெளிவான திரைக்கதை (Screen play) கொண்டதாக அமைந்துள்ளது. காரணம் மூன்று வருட முயற்சியில் உருவாக்கப்பட்ட டாக்குமெண்டரி இது.

தோமஸ் சங்காராவை ஆபிரிக்க சே குவாரா என வர்ணிப்பதற்கு இருவருக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உண்டு. தோமஸ் சங்காரா, சே குவாரா இருவருமே ஏகபோக முதலாளித்துவத்திற்கும், ஏகாபத்தியத்திற்கும் எதிராக போராடுவதற்கு ஆயுத புரட்சியே சரியென நம்பியவர்கள். விவசாய நில சீர்த்திருத்தம், கல்வியறிவு புகட்டும் பிரச்சாரங்களில் தீவிரமாக தம்மை ஈடுபடுத்திக்கொண்டவர்கள். இருவரும் இராணுவ சீருடையில் பெரிதும் காட்சியளித்தவர்கள். இருவருமே தமது 40 வயதுக்கு முன்னர் கொல்லப்பட்டவர்கள். (சே குவார 39/சங்காரா 38). தான் கொல்லப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக சங்காரா தற்செயலாக கலந்து கொண்ட பொது நிகழ்வு சே குவாரா கொல்லப்பட்டதன் 20வது வருட நினைவு தினமாகும்.
1987ம் ஆண்டு தனது நெருங்கிய நண்பனால் சங்கார படுகொலை செய்யப்பட்டு 25 வருடங்கள் கடந்து விட்ட நிலையில், அவனது இறப்பு இன்னமும் மர்மமாகவே இருக்கிறது. காரணம் Blaise Compaoré தான் இப்படுகொலைக்கு சூத்திரதாரி, பிரான்ஸ், அமெரிக்க நாடுகள் தான் இதற்கு பின்புலமாக செயற்பட்டன என இதுவரை எந்தவொரு குற்றச்சாட்டும், நேரடியாக பகிரங்கமாக முன்வைக்கப்படவில்லை. யார் மீதும் வழக்கும் பதியப்படவில்லை. மன்னிப்பும் கேட்கப்படவில்லை.
கூட்டமொன்றில் சங்காரா கலந்து கொண்டிருந்த போது, இராணுவ சீருடை தரித்த மர்மக்குழுவொன்றினால், சங்காராவும், அவனது சக 12 அரச தலைவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர். எனினும் இதற்குரிய எந்தவித புகைப்பட, வீடியோ ஆதாரங்களும் கிடைக்கப்படவில்லை. ஆனால் சங்காராவை யார் கொன்றிருப்பார்கள் என இன்றைய சூழ்நிலையில் பலர் ஆராய்ச்சி செய்து தமது முடிவுகளை வெளியிட்டுள்ளனர். புத்தகங்களாவும் இவை வெளிவந்துள்ளன. தோமஸ் சங்காரா இறந்து 20 வருடங்களுக்கு பிறகு 2007, அக்டோபர் 15ம் திகதி புர்கினோ ஃபசோ, மாலி, செனகல், நைகர், தன்சானியா, புரூண்டி, பிரான்ஸ், கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் அரச மரியாதையுடன் அவன் நினைவு கூறப்பட்டான்.

இந்த டாக்குமெண்டரி நிச்சயமாக இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த ஆபிரிக்க தலைவன் ஒருவனை பற்றிய மறு ஆய்வினை காலப்பொக்கிஷமாக கொடுக்கும் என எதிர்பார்ப்பதாக இதன் இயக்குனர் Christoph Cupelin டாக்குமெண்டரி காட்சி முடிவடைந்த அன்று கருத்து தெரிவித்து விடைபெற்றார்.

அருகிலிருந்த ஆபிரிக்க நண்பன் ஒருவர் படம் முடிந்ததும் கூறினான். 'நாங்கள் எந்த நாட்டில் இருக்கிறோம் என்றே தெரியாதிருந்த மக்களிடம், நீங்கள் இருக்கும் நாட்டின் பெயர் புர்கினோ பசோ. இதன் எல்லைகள் இவைதான் என வரையறை செய்து கொடுத்தவன் சங்காரா. அவனை படுகொலை செய்ததை தமது அதிசிறந்த நடவடிக்கைகளில் ஒன்றாக இன்று வரை மனதுக்குள் சந்தோஷப்பட்டுக்கொள்ளும் நாடுகள் எவை என உங்களுக்கும் தெரிந்திருக்கும்' என்றான்.
தோமஸ் சங்காராவை உங்களுக்கு தெரிந்த ஆபிரிக்கர்களிடம் கேட்டுப்பாருங்கள். தெரியாது  என கூறுபவர்களை கண்டிருக்க மாட்டீர்கள்.  ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு அவனை பற்றி தெரிந்திருக்கிறது என்ற கேள்வி என்னுள் இன்னமும் தொக்கி நிற்கிறது...
தோமஸ் சங்காராவை பற்றி சுவிற்சர்லாந்து இயக்குனர் Christophe Cupelin உருவாக்கிய அந்த புதிய டாக்குமெண்டரி திரைப்படம் இன்னமும் பொதுமக்கள் காட்சிக்கு வரவில்லை. அவ்வாறு வெளிவந்து காணும் சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பாருங்கள். உங்களுக்கு வேறு சில ஞாபகங்கள் தோன்றக் கூடும்...

Monday, 3 December 2012

சீனாவை சுற்றிப்பார்க்கலாம் வாங்க : வசீகரிக்கும் டைம்ஸ்லாப் வீடியோ


சீனாவின் பெரும் நகரங்களை இன்னும் நீங்கள் பார்க்கவில்லையெனில் இந்த டைம்லாப்ஸ் வீடியோவை பாருங்கள்.
உடனடி சுற்றுலாவாக சீனாவின் Guangzhou, Shanghai மற்றும் Shenzhen போன்ற முக்கிய பல நகரங்களை சுற்றிக்காட்டுகிறது இந்த வீடியோ. நேரில் சென்று பார்த்தாலும் கூட இவ்வாறான கோணங்களில் பார்க்க முடியுமா என சந்தேகத்தை தூண்டும் இந்த வீடியோவை Artem Pryadko மற்றும் Dmitry Shishkovski என்பவர்கள் உருவாக்கியுள்ளனர். அந்நகரங்களின் நெடுஞ்சாலைகள், வசீகரமான விளக்குகள், மக்கள், கலை,கலாச்சாரம் ஆகியவைகளையும் இதில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

திகைப்பூட்டும் அனுபவத்தை தரும் சுரங்கப் பாதை கலை ஓவியங்கள் : புகைப்படங்கள்


சுவிடன் நாட்டின் நகரங்களில் உள்ள ரயில் சுரங்கப்பாதைகளில் உள்ளே செல்லும் போது ஓர் திகைப்பூட்டும் அனுபவம் கிடைக்கும் எனலாம்.
ஏனனில் அங்கு முற்றிலும் வண்ண வண்ண ஓவியங்கள், சிற்பங்கள் என கலைப்படைப்பாய் மாற்றியிருக்கிறார்கள்.

அந்நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள சுமார் 100ற்கும் மேற்பட்ட சுரங்கப் பாதை ரயில் நிலையங்கள் கலை நயத்துடன் காட்சியளிக்கின்றன. சுரங்கப்பாதை அமைப்பினரின் உதவியுடன் சுமார் 150 கலைஞர்கள் இந்த கலைப்படைப்பை தயாரித்துள்ளனர்.  உலகின் மிக நீளமான ( 110 km(68.3 miles) கலை கண்காட்சியாக ஸ்டாக்ஹோமில் உள்ள சுரங்க ரயில் பாதை அமைந்துள்ளது.

கலை ஓவியங்களை கொண்டுள்ள சுரங்கப் பாதை ரயில் நிலையங்களினுள் பயணிக்கும் பயணிகளுக்கு இதமான அனுபவங்களை தருவதோடு இதனால் குற்றச் செயல்களை குறைக்கவும் வழி செய்வதாக அந்நகரின் போக்குவரத்து துறையினர் கருதுகின்றனர்.















Wednesday, 28 November 2012

2013ல் உலகளாவிய இலவச ரோமிங் சேவையை வழங்கும் வாயேஜர் மொபைல்

கணினி, இணைய தளம் மற்றும் மொபைல்கள் வந்த பிறகு இந்த உலகம் ஒரு குக்கிராமமாக மாறியிருக்கிறது. அதுபோல் நாடு விட்டு நாடு பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் அதிகரித்திருக்கிறது. மேலும் அடிக்கடி பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் வெகு வேகமாக அதிகமாயிருக்கிறது.
இந்த நிலையில் நாடு விட்டு நாடு பயணிப்பவர்கள் தங்கள் மொபைல்களைப் போகும் இடமெல்லாம் பயன்படுத்துவதால் அவர்களின் மொபைல் கட்டணம் பலமடங்காக அதிகரிக்கிறது. அதற்கு காரணம் ரோமிங் கட்டணம்.
அதாவது நாடு விட்டு நாடு செல்லும் போது வெளி நாட்டில் மொபைல் போன்களைப் பயன்படுத்தும் போது அழைப்புக்களை பெறுவதற்கும் மற்றும் அழைப்புகளை விடுப்பதற்கும் தனியாக ரோமிங் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த ரோமிங் கட்டணம் தற்போது மிக அதிகமாக இருக்கிறது. அதனால் பலர் உலகப் பயணத்தின் போது தங்களின் மொபைல்களைப் பயன்படுத்துவதில்லை.
ஆனால் 2013க்குள் இலவச ரேமிங்கை வழங்க இருக்கிறது ஒரு தொலைத் தொடர்பு நிறுவனம். அமெரிக்காவைச் சேர்ந்த வாயேஜர் மொபைல் என்ற நிறுவனம் ப்ராஜெக்ட் குளோபல் வாயேஜர் என்ற ஒரு புதிய சேவையை வழங்க இருப்பதாக உறுதி அளித்திருக்கிறது. இந்த சேவை வரும் 2013ல் தொடங்க இருக்கிறது.
இந்த சேவையின் மூலம் உலக அளவில் பயணிக்கிறவர்களுக்கு இலவச ரோமிங் சேவையை இந்த நிறுவனம் வழங்க இருக்கிறது. இந்த சேவை பேட்டன்ட் பென்டிங் குளோபல் வையர்லஸ் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும். மேலும் இந்த சேவையின் மூலம் உலகளாவிய வாய்ஸ், எஸ்எம்எஸ், டூவல் ஜிஎஸ்எம் மற்றும் சிடிஎம்எ சாதனங்களில் உலகளாவிய டேட்டா போன்றவற்றை ரோமிங் கட்டணம் இல்லாமல் பெறமுடியும்.
வாயேஜர் மொபைல் நிறுவனத்தின் தலைவர் ஜான் மார்த்தினி கூறும் போது இந்த புதிய தொழில் நுட்பம் அல்லது சேவை நிறுவனங்கள், வர்த்தகர்கள், பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை உலக அளவில் ஒருங்கிணைக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

உங்களுக்கு நோமோஃபோபியா இருக்கா? படிச்சு பாருங்களேன்...

நோமோஃபோபியா அப்படியெனில் என்னவென்று யோசிக்குறீர்களா? அது வேறொன்றும் இல்லை. இது ஒரு வகையான பய வியாதி தான். சாதாரணமாக ஃபோபியா என்றால் காரணமின்றி தேவையில்லாமல் மனதில் எழும் ஒருவித பயம் என்று அர்த்தம். அந்த ஃபோபியாவில் நிறைய வகைகள் உள்ளன. அவை பூச்சிகளைப் பார்த்து பயப்படுவது, பொது இடங்களில் பேச பயப்படுவது என்பன. அவற்றில் ஒன்றான நோமோஃபோபியா என்றால் தற்போது அனைவரிடமும் இருக்கும் மொபைலை எங்கேனும் தவறிவிட்டாலோ அல்லது மறந்து வீட்டில் வைத்து விட்டு, பின் அதனை நினைத்து வருத்தப்படுவது தான் நோமோஃபோபியா. கடந்த பல வருடங்களாக இந்த வியாதியானது பலரிடம் அதிகம் காணப்படுகிறது.
nomophobia signs you have it
ஏனெனில் தற்போது நமது டெக்னாலஜி அதிகம் வளர்ந்துவிட்டது. அதனால் அவற்றை மக்கள் தெரிந்து கொள்ள அதிக ஆர்வத்துடன் இருக்கின்றனர். பின் அவை மிகவும் பிடித்து, அவற்றின் பயன்பாடு அதிகமாகிவிட்டது. சில நேரங்களில் அவை இல்லாமல் எந்த ஒரு காரியமும் செய்ய முடியாத நிலையில் உணர்கின்றனர். ஆகவே இந்த மொபைலைப் பற்றி மேற்கொண்ட ஒரு ஆய்வில், தங்களிடம் வைத்திருக்கும் மொபைல் போனில் 66 சதவீத மக்கள், இந்த நோமோஃபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

சரி, உங்களுக்கும் நோமோஃபோபியா இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நோமோஃபோபியாவின் அறிகுறிகள்...
* இரவில் படுக்கும் போது மொபைலை தொலைத்துவிடுவது போல் கனவுகள் வந்து, அதனால் மனம் பதறி உடனே எழுந்து மொபைல் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, பின்னர் தூங்கினால், இந்த நோய் உள்ளது என்பதை அறியலாம்.
* தூங்கும் போது மொபைலை அருகில் வைத்துக் கொண்டே தூங்குவது. அவ்வாறு ஒரு நாள் கூட தவறாமல், அந்த மொபைலை படுக்க போகும் போது கையில் எடுத்துக் கொண்டு, தலையணைக்கடியில் வைத்துக் கொண்டோ அல்லது அருகில் வைத்துக் கொண்டோ தூங்கும் பழக்கம் இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். இல்லையெனில் இந்த நோயால் பைத்தியம் கூட பிடிக்க நேரிடும்.
* செல்போனானது வீட்டில் எங்கேனும் வைத்துவிட்டு, பின் அது ஏதோ ஒரு பேப்பரின் அடியில் இருக்க, ஆனால் அது நமது கண்களுக்கு தெரியாமல் இருந்து, தொலைந்துவிட்டது என்று மனம் முடிவு செய்துவிட்டால், அப்போது உடனே முகம், உடல் முழுவதும் வியர்க்க ஆரம்பிக்கும். மேலும் மனம் சிறிது அப்செட்டில் இருக்கும். இப்படியிருந்தால், அது இந்நோய்க்கான அறிகுறி என்பதை தெரிந்து கொள்ளலாம்.
* குளிக்கும் போது கூட மொபைலை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றால், இதுவும் நோமோஃபோபியாவிற்கு ஒருவித அறிகுறி.
* சிலர் ஒன்றுக்கு இரண்டு மொபைல் போன்கள் வைத்திருப்பார்கள். ஏனெனில் ஒரு மொபைலில் சார்ஜ் அல்லது தொலைந்துவிட்டாலோ, மற்றொன்றை பயன்படுத்தலாம் என்று முன்பே யோசித்து, அவர்களுடனே வைத்திருப்பார்கள். இத்தகைய அறிவு இந்த நோய் இருப்பவர்களுக்குத் தான் அதிகம் இருக்கும்.
* சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கும் போது, மொபைலில் சார்ஜ் குறைந்தால், நன்கு பேசிக் கொண்டிருப்பவர்களின் மனநிலையிலும் சார்ஜ் குறையும். பின்னர் மொபைலுக்கு சார்ஜ் போட்டால் தான், இவர்களது மனமும் சற்று பிரகாசிக்கும்.
மேற்கூறியவற்றில் நான்கு அறிகுறிகள் இருந்தாலும், இந்த நோய் உங்களுக்கு உள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.

புவியின் நிலத்துக்கு அடியில் எவ்வளவு தூரம் செல்லலாம்? : புதிய முயற்சியில் மனிதன்

மனிதன் சந்திரனுக்கு சென்று வந்துள்ளான். செவ்வாய்க் கிரகத்திலிருந்தும் சில மாதிரிகளை சேகரிக்கவும் திட்டம் தீட்டியுள்ளான்.
ஆனால் சொந்த பூமியில் நிலத்துக்கடியில் எவ்வளவு தூரம் சென்றுள்ளான்? என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடையாது. ஆனால் இக்கேள்விக்குப் பதில் காண்பதற்கான செயற்திட்டம் சுமார் $1 பில்லியன் டாலர்கள் செலவில் வெகு விரைவில் நடைபெறவுள்ளது,

அதாவது கடலுக்கு அடியில் சுமார் 6 Km தூரத்துக்கு நிலத்தைத் தோண்டி பூமியின் சூடான அடர்ந்த சிலிக்கேட் பாறைகளால் சூழப்பட்ட பகுதி (mantle) அதாவது பூமியின் மையத்துக்கும் மேலோட்டுக்கும் இடையில் (interior between the crust and the core) உள்ள பிரதேசத்துக்குச் செல்லவுள்ளனர்.

மேலும் அங்கு காணப்படும் பல்லாயிரக் கணக்கான வருடங்களுக்கு முற்பட்ட சுவடுகளையும், பாறை, மண் மாதிரிகளையும் சேகரிக்கவுள்ளனர். இம்மாதிரிகள் மூலம் புவியின் தோற்றம் மற்றும் பரிணாமம் குறித்த மிகப் பெரிய சவாலான கேள்விகளுக்கு விடை காண முடியும்.

இச் செயற்திட்டத்தின் கடினத் தன்மை காரணமாக அது புவியியல் வரலாற்றிலேயே மிக முக்கியமான மைல்கல் என அழைக்கப் படுகின்றது. ஜப்பானை அடித்தளமாகக் கொண்டு மேற்கொள்ளப் பட இருக்கும் இச் செயற்திட்டம் இன்னும் 10 வருடங்களுக்குள் முடிவடையும் எனவும் 2020 தொடக்கத்தில் புவியின் உள்ளகத்துக்கு மனிதனால் செல்ல முடியும் எனவும் கூறப்படுகின்றது.

அபி ஒன்றாம் வகுப்பு படிச்சிருக்காள்..!


அபி, அர்ச்சனா, அசின், அணு, அருண் என அகர வரிசையில் படு நாகரீகமாகன பெயர்களைக் கொண்டிருந்த அப் பிள்ளைகள், வீடு வீடாகச் சென்று சாப்பாடு கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.
பின் யார்வீட்டிலாவது டி.வி. பாரக்கிறார்கள். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளை ஏக்கத்துடன் பார்த்தபடி நிற்கிறார்கள்.

இந்த குழந்தைகளுக்கு அந்த கிராம மக்கள் அன்போடு உணவளிக்கின்றனர். மாலையில் பள்ளிப் பிள்ளைகள் யாராவது பேச்சுக்கொடுத்து விளையாடினால், பிள்ளைப்பராயக் குதுகலத்துடன் துள்ளி விளையாடுகிறார்கள். ஆனாலும் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டு கதவைத் தட்டி உணவு யாசகம் கேட்பது நெஞ்சைப் பிசைவதாகவே இருந்தது.


யார் இவர்கள்..?

சேலம் மாவட்டம் தாண்டவராயபுரம் கிராமத்தில் கடந்த ஒருமாத காலமாக குறி சொல்லி பிழைப்பு நடத்திவரும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த சுப்ரமணியன் பிள்ளைகளிவர்கள். சுப்ரமணியனும், அவர் மனைவி வள்ளியும், பகல் முழுவதும் தெருத்தெருவாக சென்று குறி சொல்லியும், கைரேகை ஜோதிடம் பார்த்தும் தொழில் நடத்தி வருகிறார்கள்.
மாலையில் தற்காலிமாகத் தங்கியிருக்கும் முருகன் கோவில் மண்டபத்தினருகே அன்றைய வருமானத்தில் சமைக்கும் உணவோடு பிள்ளைகள் வீடுகளில் யாசகம் பெற்ற உணவினையும் சேர்த்து பகிர்துண்டபின் கோவில் மண்டபத்திலேயே உறங்கிவிடுகிறார்கள்.

ஊர் ஊராகச்சென்று ஜோசியம் சொல்லும் சுப்ரமணியத்திற்கு தன் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து எந்தக் கணிப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. அவரிடமே கேட்டோம்; 'ஒரு கீரி கிடைச்சுது அதைக் குழம்பு வைக்கிறேன்... ' எனச் சமையலில் அக்கறை காட்டியவாறே எங்கள் பக்கம் திரும்பிப் பேச்சுக் கொடுத்தார்.

" கொல்லிமலைப் பக்கத்தில் இருக்கிற தொட்டியம் என் சொந்த ஊர். எங்கள் இனத்திலேயே என்னிடம் மட்டும்தான் ரேசன் கார்டு, வாக்காளர் அட்டை எல்லாமே உள்ளது. ஆனால் இப்போது அவற்றுக்கு எந்தப் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது. தொட்டியத்தில் நான் மூன்று வீடு கட்டினேன். என் உடன் பிறந்த சகோதரர்களுக்கு நம்பிக்கையாக வீட்டை எழுதி வைத்தேன், கடைசியில் அனைத்தையும் இழந்து, கடனாளி ஆகி நடுத்தெருவுக்கு வந்து விட்டேன். எங்கள் இனத்தில் உறவினர் அல்லாத மற்றவர்கள் கூட உதவ முன்வருவார்கள். ஆனால் என் தம்பிகள் எனக்கு உதவ முன் வரவில்லை. அதனால் எனக்கு அந்த ஊரில் இருக்க பிடிக்காமல் ஊர் ஊராகச் சென்று குறி சொல்லி, கைரேகை ஜோதிடம் பார்த்து கடந்த 5 வருடங்களாக பிழைப்பு நடத்தி வருகிறேன்" என்றார் சுப்ரமணியன்.

'பெண் குழந்தைகளை பள்ளிக்கும் அனுப்பாமல், இப்படி வீடு வீடாக சென்று பிச்சை எடுக்க விடுகிறீர்களே, உங்களுக்கு மனம் ஒப்புகிறதா என்று கேட்டால் "திருடக் கூடாது, பொய் சொல்லக் கூடாது. கேட்டு வாங்கி சாப்பிடுறதில் தப்பு ஒன்றும் இல்லையே" என்கிறார். மேலும் தொடர்ந்து பேசுகையில் "எங்கள் இனத்தில் எதற்கும் கூச்சப் படக்கூடாது. என் பிள்ளைகள் புத்தி சாலிகள், கூச்சப்பட மாட்டார்கள். என் பெரிய பெண் அபி ஒன்றாம் வகுப்பு வரை படித்து விட்டே ரொம்ப யூகமாக இருக்கிறாள். எங்கள் ஜாதியில் பெண் குழந்தைகள் படிக்க வைத்து ஒன்றும் ஆகப் போவதில்லை. ஆனால் நல்ல யூகம் கிடைக்க ஒரு ஐந்தாம் வகுப்பு வரையாவது படிக்க வைக்க ஆசைப் படுகிறேன். யாராவது இருக்க இடம் கொடுத்து, உதவி செய்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்து விட்டால் நான் பிறந்த பிறப்பு அர்த்தம் உள்ளதாக இருக்கும் " எனச் சொல்லி ஆதங்கப்படுகிறார்.

பேசிக் கொண்டிருக்கையிலேயே மழை வந்துவிட, பூட்டிய கோயிலின் வராண்டாவிலும் தங்க முடியாமல், பக்கத்திலுள்ள ஒரு பெரிய வீட்டின் பந்தல் போட்ட திண்ணையில், தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் ஒதுங்கினார்கள். ஓதுங்கிய அப்பெண் குழந்தைகளின் கண்களில் கன நேரம் ஒரு மிரட்சி எட்டிப் பார்த்தது.

கிடுகிடுவென்று வளர்ந்து வரும் பெண் குழந்தைகளை வெறும் குறி சொல்லி காப்பாற்றி விடுவாரா சுப்ரமணியன்? என எண்ணியதை அவரிடமே கேட்டோம்.

" எங்கள் ஜாதியில் பெண் குழந்தைகளை கட்டிக் கொடுப்பது அப்படி ஒன்றும் சிரமம் இல்லை. பவுன் போடவேண்டிய அவசியம் இல்லை. வளர்த்து ஆளாக்க வேண்டியது மட்டும்தான் எங்கள் வேலை " எனச் சாதாரணமாகச் சொல்லிவிட்டு தூக்கத்திற்குத் தயாரானார் சுப்ரமணியன்.

வசதிகளும் நவீனங்களும் கொண்டு வளர்ந்து வரும் சமுதாயத்தின், நடைமுறை வாழ்வில் இப்படியும் பல குழந்தைகளின் வாழ்நிலை அவலமாகவே இருக்கிறது. அப்படியாயின் எமது சமூகத்தின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சி...?
இப்பதிவினை வாசிக்கும்  சமூக அக்கறை மிக்க வாசகர்கள் யாராவது அப்பகுதியில் இருந்தால்,  யாசகம் கேட்கும் அந்தச் சிறுவர்களுக்கு கல்வித் தானம் கிடைக்க வகை செய்தால், வாழ்வு சிறக்கும். அச்சிறுவர்களின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.

- 4தமிழ்மீடியாவுகாக எழில்செல்வி படங்கள் : எழில்சூர்யா

Wednesday, 21 November 2012

ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவரா? முழங்கால் பத்திரம்

லண்டன்: ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு முட்டி பிரச்சனை வருவதாக இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த பிரச்சனைக்கு ஆபீஸ் மூட்டி நோய் என்று பெயரிட்டுள்ளனர்.
 desk job could give you office knee disease
இங்கிலாந்தில் பணியாற்றும் கால்வாசிக்கும் மேற்பட்டோர் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். அதற்கு காரணம் உடல் பருமன் மற்றும் காலையில் இருந்து மாலை வரை ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மூட்டு வலி வயது வித்தியாசம் இன்றி அனைவருக்கும் வருகிறது.

ஆனால் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் இந்த பிரச்சனையால் அதிகம் அவதிப்படுகின்றனர். 16 வயது முதல் 65 வயது வரையுள்ள 1,600 பேரிடம் கேட்டதில் சுமார் கால்வாசிக்கும் மேற்பட்டோர் தாங்கள் 2 ஆண்டுகளாக மூட்டு வலியுடன் வாழ்வதாகத் தெரிவித்துள்ளனர்.
அலுவலக மூட்டு நோய்க்கு இன்டர்நெட் சார்ந்த வேலை மற்றும் ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் வேலைகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
அதிக எடையால் மூட்டு எலும்பு நொறுங்குவதை தாங்கள் பார்த்துள்ளதாக எலும்பியல் மருத்துவர் ரானன் பனிம் தெரிவித்துள்ளார். இப்படியே உடல் பரும்ன் அதிகரித்துக் கொண்டிருந்தால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பலருக்கு தேவைப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Monday, 19 November 2012

கடல் வாழ் உயிரினங்கள் பற்றிய அறிவு மனிதனிடம் மிக குறைவாகவே உள்ளது : நியூசிலாந்து ஆய்வாளர்கள்

நியூசிலாந்து கடல் ஆய்வாளர்கள் இணைந்து சமீபத்தில் மேற்கொண்ட சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி ஒன்றின் போது வியப்பான தகவலை வெளியிட்டுள்ளனர்.
அதாவது கடலில் வாழும் தாவரங்கள் மற்று உயிரினங்கள் பற்றிய அறிவு இன்றைய மனிதனிடம் 1/3 பங்கே உள்ளது எனவும் கடல் உயிரினங்கள் பற்றி இன்னும் அதிகளவு மனிதன் கற்க வேண்டியுள்ளது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

உயிரியல் பாடத்திட்டத்தில் சமீபத்தில் சேர்க்கப் பட்ட கல்வியின் படி இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதாவது உயிரியலில் விளக்கப்பட்டுள்ள 226 000 உயிரினங்கள் மற்றும் விளக்கப் படவுள்ள 72 000 உயிரினங்கள் உட்பட சுமார் 1 மில்லியன் உயிரினங்கள் உலகம் முழுதும் கடலுக்கடியில் வாழ்கின்றன.

மிக அரிதான மற்றும் அழகிய கடல் வாழ் உயிரினங்களைக் கொண்டுள்ள நியூசிலாந்தின் கடல் பரப்பில் ஆய்வு செய்து வரும் கடலியலாளர்கள் மேலே கூறப்பட்ட எண்ணிக்கையுடன் மேலும் 20 000 கடல் உயிரிகளை கடந்த 10 வருடங்களுக்குள் கண்டுபிடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து 21 ஆம் நூற்றாண்டே இதுவரை கடல் வாழ் உயிரினங்களை அதிகம் கண்டுபிடித்த நூற்றாண்டாகும் என நியூசிலாந்தின் அவுக்லாந்து பல்கலைக்கழகத்தின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஆய்வின் பொருட்டு உலகி அதி சிறந்த 120 நிபுணர்கள் பணியாற்றியுள்ளனர். இதற்கென கடலில் வாழும் உயிரினங்களான பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, பூச்சிகள், மற்றும் பெரிய தாவரங்கள் ஆகியவற்றை வகைப் படுத்தி ஆராய்ந்துள்ளனர். உலகெங்கும் பரந்து வாழும் கடல் வாழ் உயிரினங்களை வகைப் படுத்தும் பணியில் 32 நாடுகளைச் சேர்ந்த 300 விஞ்ஞானிகளின் திறந்த பாவனைக்கான ஆன்லைன் தகவல் களஞ்சியம் பயன்படுத்தப் பட்டுள்ளது.

Sunday, 18 November 2012

லேசான புல்லட் ப்ரூப்: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

 Paper Thin Bulletproof Super Material Developed
நியூயார்க்: காகிதம் போன்ற மெல்லிய புல்லட் ப்ரூப் பொருளை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது லேசானது என்பதால் விவிஐபிக்கள் இனி சிரமமின்றி அணியலாம்.
விவிஐபிக்களுக்கு பாதுகாப்பிற்காக குண்டு துளைக்காக உடையை அணிவது வழக்கம். இதேபோல் குண்டு துளைக்காத கார், ராணுவ தளவாட அறைகள் போன்றவை குண்டுதுளைக்காக வகையில் உருவாக்கப்படுகின்றன. இவை அதிக தடிமனான உலோகங்களால் ஆனாவை. இதனால் இப்படியான உடைகளை அணிவது விவிஐபிக்களுக்கு சிரமமாக இருக்கும்.
அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாண பல்கலைக்கழக தொழில்நுட்ப பிரிவு வல்லுனர்கள், தற்போது "நானோ" தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, காகிதம் போன்ற மெல்லிய புல்லட் ப்ருப் பொருளை தயாரித்துள்ளனர்.இது கண்ணாடி போன்று பளபளப்பாகவும், ரப்பரை போன்று வளையும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.
இந்த மெல்லிய தன்மை வாய்ந்த புல்லட் ப்ருப் பொருள், துப்பாக்கி குண்டுகளை துளைக்க விடாமல் தடுப்பதை வெற்றிகரமாக சோதித்துள்ளனர். இது அதி அற்புதமான கண்டுபிடிப்பு என்று ரைஸ் ஸ்கூல் ஆப் இஞ்சினியரிங் டீன் நெட் தாமஸ் கூறியுள்ளார். இந்த புல்லட் ப்ரூப் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் எளிதாக உடை அணியலாம்

ஓவர் கோபம் உடம்புக்கு ஆகாது! மாராடைப்பு நிச்சயம்!!

ஒரு சிலர் எப்பொழுது பார்த்தாலும் கோபத்துடனே இருப்பார்கள். சிடு சிடு முகமும், சிவந்த கண்களுமாய் இருப்பார்கள். இது போன்ற நபர்களுக்கு மாரடைப்பு எளிதில் தாக்கி மரணம் சம்பவிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கோபத்தினால் பள்ளி மாணவர்களுக்கும் கூட இதயநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் நோயை தடுக்க சினத்தை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.
ரத்தக்குழாய் சுருக்கம்
சிறு குழந்தைகளோ, இளைஞர்களோ இன்றைய இளம் தலைமுறையினருக்கு எதற்கெடுத்தாலும் கோபம் வருகிறது.
கோபத்தை தற்காலிக பைத்தியம் என்றே சொல்லலாம். அடிக்கடி கோபப்படுவதால் ரத்த அழுத்தம் 160-80 என எகிறுகிறது.
கோபப்படும் நேரத்தில் செயல்பாடுகளை நாம் உணர்வதில்லை. அதனால்தான் கோபத்தை தற்காலிக பைத்தியம் என்கிறோம். கோபம் வரும்போது அட்ரினலின் ஹார்மோன் சுரக்கிறது. அதுவே, உடலின் ரத்தக்குழாயை சுருக்கி விடுகிறது. உடலில் ரத்தம் செல்வது குறைவதால், முகத்தில் அதிக ரத்தம் தேங்கி, முகம் சிவப்பாகிறது. அதிக கோபம் வரும்போது, அதிகமான அளவு ரத்தத்தை இருதயம் பம்ப் செய்ய வேண்டியிருக்கிறது. கோபப்படுவதால், மனம் மட்டுமின்றி உடலும் கெட்டுப்போய் திடீர் மரணங்கள் சம்பவிக்கின்றன.
அமெரிக்காவில் இருதய நலன்துறை தலைவரும் மியாமி மில்லர் ஸ்கூல் நரம்பியல் துறை தலைவருமான ரால்க் சாக்கோ, மனிதர்களின் கோபத்தினால் நடத்தையில் மாற்றம் ஏற்படுவது மட்டுமல்லாது, இதய நோய்கள் ஏற்படுவது நிச்சயம் என்று கூறியுள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு இதயநோய்
இன்றைக்கு பள்ளிமாணவர்களுக்கு இடையேயான மோதல்கள் அதிகரித்து வருகின்றன. அவர்களுக்கு ஏற்படும் கோபத்தினால் மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் பள்ளி மாணவர்களை தாக்கத் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக கோவையில் ஒரு பள்ளியில் 1,500 மாணவ, மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில், 8 பேருக்கு இருதய நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே மாணவர்களிடையே கோபம் ஏற்படுவதை தவிர்க்க அவர்களுக்கு உளவியல் ரீதியான பயிற்சிகளை அளிக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இருதயம் நன்றாக இருந்தால்தான் ஒரு மனிதன் நன்றாக இருக்கமுடியும். எனவே கோபத்தை தவிர்த்து மகிழ்ச்சியுடன் வாழ நினைத்தாலே மாரடைப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

Saturday, 17 November 2012

அதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க...

புகைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் நாற்பது வயதிற்கு முன்பாக அதனை கைவிட்டு விட்டால் நீண்டநாள் வாழலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதனை ஆதாரப்பூர்வமாக ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர் ரிச்சர்ட் பெட்டோ தலைமையில் இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிரிட்டனைச் சேர்ந்த புகைப் பழக்கத்திற்கு அடிமையான பத்து லட்சம் பெண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அதில் நாற்பது வயதுக்கு முன்பாக புகைப் பழக்கத்தை கைவிட்டவர்கள், தொடர்ந்து புகைப்பவர்களை விட சராசரியாக ஒன்பது ஆண்டுகள் அதிகமாக வாழ்கிறார்கள் என்று தெரியவந்தது.
இந்த ஆய்வு பெண்களிடையேசெய்யப்பட்டிருந்தாலும், ஆண்களுக்கும் இந்த முடிவு அதே அளவில் பொருந்தும் என்று ஆய்வுக்கு தலைமையேற்றிருந்த சர் ரிச்சர்ட் பெட்டோ கூறியுள்ளார். புகைப் பழக்கத்திற்கு அடிமையாகி பின்னர் அதை கைவிடுவதை விட எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பதுதான் ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஏற்றது என்றும் ஆய்வாளர் வலியுறுத்தியுள்ளார். இந்த ஆய்வு முடிவு பிரபல மருத்து இதழில் வெளியிடப்பட்டுள்ளது.Women Who Quit Smoking Before Age 40 Reduce Risk

Tuesday, 13 November 2012

ISS உடன் பேச்சு தோல்வி? 2013 ஜூனில் விண்ணுக்கு மனிதனை அனுப்ப சீனா திட்டம்

எதிர்வரும் 2013 ஜூனில் ஷென்ஷொவு -10 எனும் விண்கலத்தின் மூலம் விண்ணுக்கு மனிதனை அனுப்ப சீனா திட்டமிட்டிருப்பதாக சீன வான் ஆராய்ச்சிக் கழகம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நிகழ்த்தப் பட்ட ஷென்ஷொவு-9 செயற்திட்டத்தைப் போலவே இப் பயணத்தின் போதும் இரு ஆண் விண்வெளி வீரர்களும்  ஒரு வீராங்கணையும் இதில் பங்கேற்க உள்ளனர்.

இந்த பயணத்தின் போது விண்ணில் பூமியைச் சுற்றி வரும் டியான்கொங் -1 எனும் ஆராய்ச்சிக் கூடத்தை வீரர்கள் சென்றடையவுள்ளனர். சுமார் 15 நாட்கள் இதில் தங்கியிருந்து தமது விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவுள்ள இவர்கள் பூமியிலுள்ள அவதானிகளுக்கு விஞ்ஞானப் பேருரைகளும் ஆற்றவுள்ளனர்.

இச்செயற்திட்டத்தின் வெற்றி நாசாவின் சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தை போன்றே சீனாவும் ஒரு ஸ்பேஸ் லேப்பை அல்லது பணியாற்றும் நிலையத்தை உருவாக்க வழிகோலும் எனக் கருதப்படுகின்றது.

உலகில் விண்ணுக்கு மனிதனை செலுத்திய நாடுகள் மொத்தம் 3 ஆகும். இதில் அமெரிக்கா, ரஷ்யா ஆகியவற்றை அடுத்து இறுதியாக 2003 இல் விண்ணுக்கு மனிதனை செலுத்தியதன் மூலம் சீனாவும் இடம்பிடித்தது. இந்நிலையில் விண்வெளி ஆராய்ச்சியில் வேகமாக முன்னேறி வரும் சீனா 2020 இற்குள் ஒரு செய்மதி ஆய்வு கூடத்தை நிறுவுவதற்கும் சந்திரனுக்கு மனிதனை அனுப்புவதற்கும் திட்டமிட்டுள்ளது.

இதேவேளை ISS எனப்படும் சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்துடன் சீனாவும் இணைய வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் பயனளிக்கவில்லை. இக்காரணத்தால் சீனாவின் தன்னிச்சையான இந்த ஸ்பேஸ் லேப் செயற்திட்டம் பீஜிங் மற்றும் வாஷிங்டனுக்கு இடையேயான அரசியல் முறுகலை ஏற்படுத்தியிருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Sunday, 11 November 2012

42 ஒளியாண்டு தூரத்தில் பூமியைப் போன்ற கிரகம் (Super earth) கண்டு பிடிப்பு


பூமியில் இருந்து 42 ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் 'HD 40307' எனப் பெயரிடப்பட்ட நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி வலம் வரும் பூமியைப் போல் தண்ணீர் உடையதும் உயிரினங்கள் வசிக்கத் தக்கதும் ஆன Super earth எனப்படும் புதிய கிரகம் ஒன்றை  வானியலாளர்கள் சமீபத்தில் கண்டு பிடித்துள்ளனர்.
இந்த Super earth உடன் சேர்த்து மேலும் இரு தண்ணீர் உடைய கிரகங்களும் இந்த நட்சத்திரத்தைச் சுற்றி வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த Super earth பூமியை விட 7 மடங்கு அதிக எடையுடையது. இங்கு திரவ நிலையில் தண்ணீர் இருப்பதும் ஊர்ஜிதப் படுத்தப் பட்டுள்ளது. எனினும் உயிரினங்கள் வாழ்கின்றனவா என உறுதிப் படுத்த அவசியமான இன்னும் பல அவதானிப்புக்கள் தேவை எனவும் வானியலாளர்கள் மற்றும் வான்பௌதிகவியலாளர்கள் (Astrophysicists) கூறுகின்றனர்.

மேலும் இக்கிரகம் சுற்றி வரும் நட்சத்திர்மான HD 40307 நமது சூரியனை விட சற்று சிறியது என்பதுடன் ஆரெஞ்சு நிற ஒளியை வெளிப்படுத்தும் நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் மற்றும் பூமியைப் போன்ற கிரகம் ஆகியவை சிலியில் உள்ள ஐரோப்பிய விண்ணாய்வுக் கழகத்தின் தெற்கு அவதான நிலையமான 'சில்லா' இருந்து கண்டு பிடிக்கப் பட்டன.

HD 40307 நட்சத்திரம் மொத்தம் 6 கோள்களை உள்ளடக்கியுள்ளது. மேலும் இது குறித்த அவதானத்தின் அடுத்த கட்டமாக விண்ணில் நிறுத்தப் பட்டுள்ள அதிக வலுவுள்ள தொலைக்காட்டிகள் மூலம் இப் பூமி போன்ற கிரகம் எந்த மூலகங்களால் ஆக்கப் பட்டுள்ளது என்பதை அறிவதே எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Saturday, 10 November 2012

தலிபான்களுக்கு எதிராக போராடியதை சிறப்பிக்க நவ.10ஐ மலாலா நாளாக அறிவித்த ஐ.நா.

 World Marks Malala Day
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் கொள்கைகளுக்கு எதிராக, பெண் கல்வி குறித்து தைரியமாக கருத்து தெரிவித்ததற்காக தலிபான்களால் சுடப்பட்ட மலாலாவை சிறப்பிக்கும் வகையில் நேற்று 'மலாலா' நாளாக ஐ.நா. சபை பிரகடனப்படுத்தியிருந்தது.
தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டுக்குள்ளான மலாலா, உயிருக்கு போராடிய நிலையில் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். குழந்தைப் போராளி மலாலாவைப் பாராட்டி அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
இந்நிலையில் அவர் சுடப்பட்ட 30வது நாளை மலாலா நாளாக கொண்டாடுமாறு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனின் உலக கல்விக்கான சிறப்பு தூதரும், இங்கிலாந்து முன்னாள் பிரதமருமான கார்டன் பிரவுன் கேட்டுக் கொண்டிருந்தார்.
மேலும் மலாலா மற்றும் பள்ளி செல்ல உரிமை மறுக்கப்படும் 32 மில்லியன் பெண் குழந்தைகளை நினைவுகூறும் நாளாகவும் கடைபிடிக்கப்படும் என்று கார்டன் பிரவுன் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் நேற்று மலாலா நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி குழந்தைகளின் கல்வி உரிமைக்கான பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நாளை ஒட்டி ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாய் விடுத்த அறிக்கையில், உரிமைக்காகப் போராடிய மலாலாவை சுட்ட தலிபான்களை வேட்டையாடுவோம் என்று அறிவித்திருக்கிறார்.

டெனிம் டிரவுசர்கள் எப்படி தோன்றின : ஒரு வரலாற்று பார்வை

இன்றைய உலகின் தவிர்க்க முடியாத ஆடைகளில் டெனிம் டிரவுசர்களுக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகிறது.
கைவசம் இப்போது உங்களிடம் எத்தனை டெனிம் டிரவுசர்கள் உள்ளன? குறைந்தது ஒன்றாவது வைத்திருப்பீர்கள். இந்த டெனிம் டிரவுசர்கள்  எப்படி உருவானவை என்பதற்கு ஒரு சுவாரஷ்யமான வரலாறு உண்டு. அந்தவரலாற்றினை முழுமையாகவும் சுருக்கமாகவும் எழுதியுள்ள வெங்காயம் வலைப்பதிவாளருக்கு நன்றி கூறி அவருடைய இப்பதிவினை இங்கு மீள்பிரசுரிக்கிறோம்.
- 4தமிழ்மீடியா குழுமம்
நீடித்த உழைப்பு சலவை செய்ய வேண்டியதில்லை துணி வெளுத்துப்போனாலும் அதுவும் ஒரு பேஷன் ஆகிவிடும். ஒப்பீட்டளவில் மலிவானது Guess Jeans Diesel Levi's Seven Jeans Apple Bottoms Von Dutch என பல பிராண்ட் களில் வருகிறது.  இது இரண்டு நூற்றண்டுகளுக்கு முன்பே சந்தைக்கு வந்து விட்டது ஸான்ஃப்ரான்சிஸ்கோவில் வாழ்ந்த ஜெர்மனியாரான levistrauss என்னும் வணிகரால் 1850 களில் அடிமைத் தொழிலாளிகளான சுரங்கத்தொழிலாளிகளின் பாவனைக்காகத்தான் இந்த கரடு முரடன துணி முதலில் உருவாக்கப்பட்டது.

"denim" இது பிரெஞ்சு வார்த்தையில் இருந்து தோன்றியது பிரான்ஸ்சில் "nimes" நகரத்தில் பட்டு நூலையும் கம்பளியையும் கலந்து நெய்து serge-de-nimes என்ற பெயரில் தடித்த துணியை தயார் செய்தனர். de -nimes என்றால் நிம்சில் இருந்து என்று பொருள். பின்பு ஐரோப்பாவில் இதன் பெயர் டெனிமாக மாறிவிட்டது.

கலிபோர்னிய சுரங்கத்தொளிலளர்கள் அணிந்திருந்த டெனிம் 1930 ஹோலிவூட் கௌ பாய்சின் கண்களில் பட்டது உடனே அவர்கள் டெனிம்ஐ ஹோலி வூட்டுக்கு எடுத்து சென்று பிரபலமக்கினர்கள். ஹோலி வூட்டால் டெனிம் அசுர வேகத்தில் பிரபலமானது டிவி களில் நிகழ்சிகளில் இளசுகளின் அடையாளமாக டெனிம் காட்டப்பட்டது. இளைஞர்கள் டேனிமை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். இந்தக்கலாச்சாரம் அமெரிக்காவில் வெகு வேகமாக பரவியபோது அமெரிக்க பழமை வாதிகளால் டெனிம் கீழ்தரமானோர் அணியும் ஆடையாக நோக்கப்பட்டது. சில பாடசாலைகள் டெனிம் அணிவதற்கு தடை விதித்தன.
ஆனால் டெனிம்முக்கு ஆதரவு கொடுத்தது யார் தெரியுமா? ஹோலி வூட் அதற்கு முன் யார் என்ன செய்துவிட முடியும். இதனால் எதிர்ப்புக்கள் எல்லாம் தூசாகி விட்டன (இன்றும் ஹோலி வூட் நவீனம்/கலாச்சாரம் என்று எதை அறிமுகப்படுத்தினாலும் இன்றைய உலகம் எதிர்ப்புக்காட்டாமல், அத்தனையும் ஏற்றுக்கொள்ளும்)

ஹோலிவூட்டின் ஆதரவால் அமெரிக்காவை தாண்டி டெனிம் ஏனைய நாடுகளுக்குள் சர்வ சாதாரணமாக பரவியது முதன் முதலில் டெனிம் அறிமுகமாகிய ஹோலிவூட் திரைப்படம்  Rebel Without a Cause
இதை பிரபலமாக்கியதில் அமெரிக்க இராணுவத்தினருக்கும் முக்கிய பங்குண்டு இரண்டாம் உலகப்போரின்போது வீரர்கள் தமது உடைகளுடன் டெனிம்மையும் எடுத்து சென்றார்கள். அங்கு இவர்கள் சாதாரண நேரங்களில் இவற்றையே அணிந்து சென்றார்கள் இவற்றை பார்த்ததும் உள்ளூர் வாசிகள் ஆடிப்போய் விட்டார்கள். பலர் ஆச்சரியமாக வேடிக்கை பார்த்தார்கள் (காஞ்சமாடு கம்பில பிறது மாதிரி)

1950 இல் அமெரிக்காவில் வெற்றிகரமாக தனது கால்தடத்தை பதித்துக்கொண்டது டெனிம், பாடசாலைகள் இதை அணிவதற்கு அனுமதிக்க வேண்டியதாயிற்று. 1960 -70 களில் வேறு வேறு நிறங்களில் டெனிம் வெளி வந்தது. கீழத்தேய நாடுகளில் உள்ளோர் தாம் மேற்கத்தேய கலாச்சாரத்தை பின் பற்றுகிறோம் என்பதைக்காட்டுவதற்கு இவற்றை அணிய ஆரம்பித்தார்கள். 1990 இல் டெனிம் மாற்று உருவம் பெற தொடங்கியது. வயது வேறுபாடு இல்லாமல் பெற்றோர் பிள்ளைகள் என அனைவரும் இதை அணிந்தார்கள். டைம்ஸ் பத்திரிக்கை டேனிமை பற்றி பின்வருமாறு செய்தி வெளியிட்டது. "single most potent symbol of american"

ஆண்டு தோறும் உலகம் முழுவதுமாக 4000 மில்லியன் M துணி விற்பனையாகின்றது. ஜீன்ஸ் விற்பனையில் அமெரிக்காவின் "levis" நிறுவனம் தொடர்ந்தும் முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கின்றது. இதன் உரிமையாளர் Levi Strauss இவர்தான் நீல நிற டெனிமை உரிமத்துடன் விற்பனை செய்பவர். 1996 இல் இந்நிறுவனம் 7.1 பில்லியன் டாலர்களை சம்பாதித்தது இந்நிறுவனத்தின் வருடாந்த குறைந்த விற்பனை 2008 இல் 4400 மில்லியன் டாலர்கள்.
டெனிம்மிற்கு பாரம்பரிய உடைகளை தகர்த்தெறிய எதிர்ப்புக்கள் இருக்கவில்லை மக்கள் தாமாகவே வலிந்து சென்று வாங்கி அணிந்து கொண்டார்கள். உலகில் அதிகம் டெனிம் ஜீன்ஸ் அணிபவர்கள் அமெரிக்கர்கள்தான். அதிகம் இதை விற்பனை செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. வருடத்திற்கு 25 மில்லியன் ஜீன்ஸ்கள் டெனிம் விளம்பரங்களுக்காக நிறுவனங்கள் பணத்தை வாரி இரைத்துக்கொண்டிருக்கின்றன இவ்விளம்பரங்கள் 18 -24 வயதனோரை குறி வைத்தே விளம்பரமாக்கப் படுகின்றன.
சில பழமையான விளம்பரங்கள்:








டெனிம் ஜீன்சின் முக்கிய மூலப்பொருள் பருத்திப்பஞ்சு. உலகம் முழுவதுமாக 34 மில்லியன் ஹெக்டயர்கள் பரப்பளவில் பருத்தி பயிரிடப்படுகின்றது. மிக அதிக அளவில் ஜீன்சை பயன்படுத்தும் நாடு அமெரிக்கா. ஆனால் மிக உயர்ந்தளவில் இதற்கான பருத்தியை உற்பத்தி செய்பவை இந்தியாவும் சீனாவும் தான். இந்தியாவில் 2009 இல் 9 மில்லியன் ஹெக்டயர் பரப்பளவில் பருத்தி உற்பத்தி செய்யப்பட்டது. இது வெறுமனே உற்பத்தி சார்ந்த விடயங்கள் அல்ல மேற்கு நாடுகள் தாம் இவற்றை உற்பத்தி செய்வதால் ஏற்படும் பிரச்சனைகள் இடர்பாடுகளை முன் கூடியே திட்டமிட்டு விட்டு இவற்றை மூன்றாம் நாடுகளின் மீது சுமத்தி விடுகின்றன.
இதனால் அதிகம் பாதிப்புற்ற நாடுகளில் உஸ்பெகிஸ்தான் முக்கியமானது. பருத்தி உற்பத்தியில் ஆறாம் இடத்தில் உள்ளது. இதற்கு நல்ல வெகுமதியையும் இந்நாடு கொடுத்துள்ளது. இதன் ஏறல் கடல் இதனால் பாதிப்படைந்தது கடலுக்கு செல்லும் ஆறுகளை பருத்திக்கு பயன்படுத்தியதால் கடல் படிப்படியாக சுருங்கி 100 km வரை உள் வாங்கிவிட்டது.  கரையோர மீனவர்கள் 100 km சென்றுதான் மீன் பிடிக்க வேண்டிய நிலை. 30 வகையான மீனினங்கள் இருந்த இடத்தில் இன்று இரண்டு வகையான மீனினங்கள் தான் எஞ்சி உள்ளன. கடல் வற்றியதால் இன்று 36 000 சதுர கிலோமீட்டர்களுக்கு உப்புக்கள் படிந்து கிடக்கின்றன.  அவற்றை  காற்று அள்ளி சென்று விவசாய நிலங்களை தாக்குகின்றதால் அவற்றிற்கும் அழிவு ஏற்பட்டு வருகின்றது. மோசமான குடி நீர் காரணமாக மக்களுக்கு சிறுநீரக நோய்கள் பல ஏற்படுகின்றன. குழந்தைகளின் மரணம் அதிகமுள்ள நாடுகளில் உஸ்பெகிஸ்தானும் இடம்பெற்றுள்ளது.

இதை விட பருத்திக்கு பயன் படுத்தும் பூச்சிநாசினிகள் மருந்துகள் போன்றவற்றால் சூழல் மாசடைவதுடன் பாதுகாப்பாக கையாளும் அறிவு விவசாயிகளுக்கு இல்லாததால் நோய்களும் மரணங்களும் சர்வ சாதாரணமாகி விட்டன.

இதற்கு நீல நிறமேற்ற இண்டிகோ சாயம் பயன்படுத்தப்படிகின்றது. சாயமூட்டிய ஜீன்சை கற்சலவை செய்ய பியூமைஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளில் பெறப்படும் கற்கள் பயன்படுகின்றன. ஒரு ஜீன்சை சலவை செய்ய இவ்வாறான ஒரு கிலோ கல் தேவைப்படுகின்றது. இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர். இந்தியாவில் மட்டும் ஆறு வயது முதல் 14 வயது வரை உள்ள நான்கரை லட்சம் பெண்கள் இவ்வாறு பருத்தி வயல்களில் வேலை செய்கின்றார்கள். இவர்களுக்கு மிகக்குறைந்த ஊழியமும் போனஸ்சாக பாலியல் கொடுமைகளும் வழங்கப்படுகின்றன. தாய்லாந்தில் இப்படியான ஆடைத்தயரிப்பு நிறுவனத்தில் தொழிலாளர்கள் தமக்கென சங்கம் அமைக்க முயற்சித்தபொழுது உடனடியாக 300 தொழிலாளர்கள் சுடப்பட்டனர். இவ்வாறான இன்னல்களை முன்கூட்டியே யோசித்துத்தான் மேற்குலக நாடுகள் இவற்றை மூன்றாம் நாடுகளின் மீது திணித்துள்ளன. அத்துடன் தமது நிறுவனங்களை எம்மை போன்ற நாடுகளில் நிறுவவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இப்பதிவின் தாயகம் : வெங்காயம்