Saturday, 22 December 2012

கீழக்கரை மகளிர் கல்லூரிக்கு ச‌ர்வ‌தேச‌(ஐஎஸ்ஓ) தரச் சான்றிதழ்

photo by tbakcw

கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி வெள்ளிவிழா ஆண்டான நடப்பாண்டில் ( International Organization for Standardization )சர்வதேச தரக்குழுவினரின் தரச்சான்று பெற்றுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் சுமையா கூறுகையில்,

‘சர்வதேச வலையமைப்பு மற்றும் ஆஸ்திரிய தரச் சான்றிதழ் அமைப்பு குழுவினர் கல்லூரிக்கு வ‌ருகை த‌ந்த‌ன‌ர். கல்லூரியின் இளங்கலை மற்றும் முதுகலை வகுப்புகளுக்குரிய பாடத்திட்டம் வடிவமைத்தல் மற்றும் பட்டம் வழங்குதலையும், ஆராய்ச்சி திட்டங்களையும் ஆய்வு செய்தனர்.
மேலும் சான்றிதழ் மற்றும் பட்டய படிப்பு மேம்பட்ட பட்டயம் முதுநிலை பட்டய படிப்புகளுக்குரிய கலை அறிவியல், மனிதநேயம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வகுப்புகளுக்குரிய பாடத்திட்டம் செயல்படுத்தி பராமரிக்கப்பட்டு வருவதையும் ஆய்வு செய்தனர். இதையடுத்து கல்லு�ரியின் வெள்ளிவிழா ஆண்டான நடப்பாண்டிலேயே ஐ.எஸ்.ஓ. 9001&2008 சான்றிதழ் வழங்கியுள்ளனர்’ என்றார்.

No comments:

Post a Comment