Saturday, 29 November 2014

வங்கக் கடலில் வலுவடையும் காற்றழுத்த தாழ்வு நிலை – 24 மணி நேரத்தில் கனமழை Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/rain-tamil-nadu-within-24-hours-meteorological-center-215955.html

சென்னை: வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து வருவதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறி வருகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். மேலும், அடுத்த 24 மணிநேரத்தில் இது மேலும் வலுவடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், கடலோர மாவட்டங்களில் பலத்த மழைக்கான வாய்ப்பு பெருமளவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் தென்கடலோர மாவட்டமான ராமேஸ்வரம் பகுதியில் அலைகள் மிகவும் சீற்றமாக இருப்பதால் மண்டபம், பாம்பன் மீனவர்கள் தங்களது நாட்டுப்படகுகளைத் நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர். கடந்த 2 நாட்களாக கடல் சீற்றமாக இருப்பதால் குறைவான மீனவர்களே கடலுக்குச் சென்றனர்.இந்த மழை டிசம்பர் 8 ஆம் தேதி வரை நீடிக்கும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/rain-tamil-nadu-within-24-hours-meteorological-center-215955.html

Tuesday, 18 November 2014

இந்தியாவிலும் பரவியது எபோலா: டெல்லியில் முதல் நோயாளி- தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை Read more at: http://tamil.oneindia.com/news/india/india-s-first-ebola-patient-has-been-quarantined-215159.html

இந்தியாவிலும் பரவியது எபோலா: டெல்லியில் முதல் நோயாளி- தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை

Read more at: http://tamil.oneindia.com/news/india/india-s-first-ebola-patient-has-been-quaraடெல்லி: லைபீரியாவில் டெல்லி வந்த இந்தியரை எபோலா வைரஸ் தாக்கியிருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் அவரை தனிமைப்படுத்தியுள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, லைபீரியா, சியர்ரா லியோன், கினியாவில் ஆயிரக் கணக்கானோரின் உயிரை எபோலோ வைரஸ் குடித்துள்ளது. இந்நிலையில் லைபீரியா சென்ற 26 வயது இந்தியரை எபோலா வைரஸ் தாக்கியது. சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த அவர் டெல்லி வந்தார். டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையில் அவரது ரத்தத்தில் எபோலா இல்லாவிட்டாலும் விந்தணுவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விமான நிலையத்தில் உள்ள சுகாதார மையத்தில் அவர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். குணமடைந்த பிறகும் விந்தணுவில் 3 மாதம் வரை எபோலா வைரஸ் இருக்கலாம் என்று நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. அந்த நபர் குறைந்தது 6 மாதங்களாவது உறவு கொள்ளாமல் இருக்க வேண்டும். இல்லை என்றால் ஆணுறை அணிந்து கொள்ள வேண்டும் என்று அது மேலும் தெரிவித்துள்ளது. India quarantines man recovering from Ebola அந்த வாலிபரின் விந்தணு பரிசோதனையில் எபோலா இல்லை என்று வரும் வரை அவர் தனிமைப்படுத்தி வைக்கப்படுவார். அவரால் நோய் பரவும் என்று இல்லை இருப்பினும் மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் விஷப்பரீட்சை வேண்டாம் என்று தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.com/news/india/india-s-first-ebola-patient-has-been-quarantined-215159.htmlntined-215159.html

குழந்தைகள் உயிரிழக்க காரணம் குறைபிரசவம்தான்: முதல்வர் பன்னீர்செல்வம் Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/medical-team-sent-dharmapuri-tamil-nadu-cm-215151.html

சென்னை: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்புக்கு, குறைப் பிரசவம், பிறந்த குழந்தை மிகக் குறைவான எடை கொண்டிருந்தது போன்ற பிரச்னைகளே காரணம் என தெரியவந்துள்ளதாக தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை: தருமபுரி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பச்சிளங்குழந்தை தீவிரசிகிச்சைப் பிரிவில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பச்சிளம் குழந்தைகளில் 11 பச்சிளம் குழந்தைகள் 14.11.2014 முதல் இன்று வரை இறந்துள்ளனர் என்பதை அறிந்து, இது குறித்த ஒரு ஆய்வுக் கூட்டம் இன்று (18.11.2014) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தர்மபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் இறப்புகள் அனைத்தும் பல்வேறு இயற்கையான காரணங்களால்தான் நிகழ்ந்துள்ளது என்பதும், இதில் சிகிச்சை குறைபாடு எதுவும் இல்லை என்பதும் எடுத்துரைக்கப்பட்டது. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 14ஆம் தேதியன்று 5 பச்சிளங்குழந்தைகள் இறந்தன என்று தெரிந்தவுடன், சென்னையில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையிலிருந்து பச்சிளங்குழந்தைகள் தீவிர கண்காணிப்புப் பிரிவு ஒருங்கிணைப்பு அலுவலர், டாக்டர் சீனிவாசன் உடனடியாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். குறைபிரசவம், எடை குறைவு அவரது ஆய்விலிருந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எந்தவொரு மருத்துவ ரீதியான குறைபாடுகளும் காணப்படவில்லை. தற்போதும் 73 பச்சிளங்குழந்தைகள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் கீதாலட்சுமி தலைமையில் பச்சிளங்குழந்தை நிபுணர்கள் டாக்டர் நாராயண பாபு, டாக்டர் சீனிவாசன் மற்றும் டாக்டர் குமுதா ஆகியோர் தர்மபுரி மருத்துவமனையில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த 11 பச்சிளம் குழந்தைகளில் 7 குழந்தைகள் இரண்டரை கிலோ எடைக்கு குறைவாக இருந்தன. அதில் 5 பச்சிளம் குழந்தைகள் 1.2 முதல் 1.75 கிலோ எடை மட்டுமே இருந்தன. இந்த குழந்தைகள் குறைப் பிரசவத்தில் பெற்றெடுக்கப்பட்டுள்ளனர். சராசரியாக 37 வார கர்ப்ப காலத்திற்குப் பதிலாக 28 லிருந்து 34 வாரத்தில் குறைப்பிரசவம் நடைபெற்றுள்ளது. இறந்த 11 பச்சிளம் குழந்தைகளில், 8 குழந்தைகள் இதர மருத்துவமனைகளில் இருந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். கடந்த நான்கு நாட்களில் 11 குழந்தைகளின் இறப்புக்குக் காரணம், மிக இளம் வயது தாய்மார்கள், முந்தைய பிரசவத்திற்கும் தற்போதைய பிரசவத்திற்கும் மிகக் குறைந்த இடைவெளி இருந்தது, குறைப் பிரசவம், பிறந்த குழந்தை மிகக் குறைவான எடை கொண்டிருந்தது ஆகியவையே ஆகும். சிசுமரணங்கள் அதிகரிப்பு தர்மபுரி மாவட்டத்தில் சிசு மரண விகிதம் 19 என உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் சராசரியாக மாதமொன்றுக்கு 2050 உயிருள்ள குழந்தைகள் பிறக்கின்றன; 39 சிசு மரணங்கள் ஏற்படுகின்றன. அந்த விகிதாச்சார அடிப்படையிலேயே நடப்பு மாதமும் சிசு இறப்பு ஏற்பட்டிருந்தாலும், நான்கு நாட்களில் சிறிதளவு அதிக இறப்பு ஏற்பட்டுள்ளதால் தொடர் கண்காணிப்புக்காக கீழ்க்காணும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மருத்துவக் கல்லூரி இயக்குநர் டாக்டர் கீதாலட்சுமி தலைமையில் மருத்துவ நிபுணர் குழு அனுப்பப்பட்டு தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அனைத்து பச்சிளங்குழந்தைகளுக்கும் தொடர் கண்காணிப்பு மற்றும் சிறப்பு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் பிரசவம் நடைபெறும் 36 ஆரம்ப சுகாதார நிலையங்களில், கடைசி நேரம் வரை காத்திருக்காமல் சிக்கலான பிரசவங்களை உரிய நேரத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்ப்பகால பராமரிப்பை கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் கூட்டு முயற்சியுடன் மேலும் வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இணை இயக்குநர் சுகாதாரம், துணை இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மூலம் எடை குறைவான தாய்மார்களை தீவிரமாக கண்காணித்து மேல் சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/medical-team-sent-dharmapuri-tamil-nadu-cm-215151.html

Friday, 13 December 2013

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு…!!

994677_251309318364772_563741236_nதிகிலூட்டும் உண்மை.  கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் போல பரந்து விரிந்த ஏரி. ஆங்காங்கே மலைகள். பசுமையாக குட்டி குட்டியாக தீவுகள். சுற்றுலா பயணிகளை கவரும் சுவாரஸ்யம் ஏராளம் என்றாலும், அங்கு போகும் மனிதர்கள் திடீரென மாயமாகி விடுகிறார்கள்.
இந்த மர்ம தீவு பற்றிய விஷயங்கள் திகிலூட்டுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய பாலைவனக் கடல் என்று பெயர் பெற்ற “துர்கானா ஏரி” கென்யாவில் உள்ளது. ருடால்ப் ஏரி என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இந்த ஏரிக்கு, பல்வேறு நதிகளில் இருந்து நீர் வருகிறது. இங்கு நிலவும் கடும் வெப்பத்தால், ஒரு பகுதி ஆவியாகிறது.
மீதமுள்ள நீர்,  அதிக உப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. கென்யாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடங்களில் ஒன்றாக இந்த பாலைவனக் கடல் திகழ்கிறது.  குட்டி குட்டி தீவுகளும், பழமை மாறாத பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையும் கவர்ந்திழுக்கிறது. இந்த அட்ராக்ஷனோடு நம்மை உறைய வைக்கும் அதிர்ச்சிகளும் உள்ளன.
இங்குள்ள குட்டி தீவுகளில் ஒன்று “என்வைட்டினெட்”. இங்கு வாழும் பழங்குடியின மக்கள் பேசும் மொழி சொல்.  இதன் அர்த்தம் “திரும்ப வராது” என்பதாகும்.  என்வைட்டினெட் தீவுக்குள் செல்பவர்கள் யாரும் திரும்பி வருவது கிடையாதாம். அறிவியல் ஆராய்ச்சிகளுக்கே சவால் விடும் வகையில் இந்த தீவு உள்ளது.
முன்பொரு காலத்தில் இதில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர் என்றும் மீன் பிடிப்பது, வேட்டையாடுவது அவர்களின் தொழிலாக இருந்தது என்றும் பக்கத்து தீவுகளை சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். வியாபாரத்துக்காக பக்கத்து தீவுகளுக்கு வருவார்களாம். ஆனால் ஒரு காலத்துக்கு பிறகு தீவில் இருந்து வெளியே வரும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் யாரும் வராமல் போனதால் பக்கத்து தீவுகளில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து அந்த தீவுக்கு சென்றுள்ளனர். ஆனால் அப்படி சென்றவர்களும் திரும்பாமல் போகவே மர்ம தீவாக மாறியது என்வைட்டினெட்.
கடந்த 1935ம் ஆண்டு ஆங்கிலேய விஞ்ஞானி விவியன் பஸ் என்பவர் தன் குழுவினரோடு இந்த தீவு பற்றி ஆய்வுகள் மேற்கொண்டார். என்வைட்டினெட் குட்டித் தீவுக்கு இளம் விஞ்ஞானிகள் மார்டின் ஷெப்லிஸ், பில் டேசன் ஆகியோரை அனுப்பி வைத்தார் விவியன். நாட்கள்தான் போனதே தவிர விஞ்ஞானிகள் திரும்பியபாடில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆராய்ச்சியாளர்கள் தூரத்தில் இருந்தே ஆய்வுகளை செய்தனர்.
ஹெலிகாப்டரில் பறந்தபடியே வேவு பார்த்தனர். எந்த தடயமும் கிடைக்கவில்லை. பழங்குடியினர் குடிசைகள் அப்படியே இருந்தன. அழுகிய மீன்கள் சிதறிக் கிடந்தன. மனித நடமாட்டம் மட்டும் இல்லவே இல்லை.
இதையடுத்து பக்கத்து தீவுகளில் வசித்தவர்களிடம் தகவல்கள் சேகரித்தார். ‘அந்த தீவில் பிரமாண்ட ஒளி ஒன்று வரும். அப்போது இடத்தில் யார் இருந்தாலும் காணாமல் போய் விடுவார்கள். அப்படித்தான் அங்கிருந்தவர்கள் காணாமல் போயிருப்பார்கள்’ என்று பக்கத்து தீவுவாசிகள் கூறினர்.
பிரமாண்ட ஒளி வெள்ளம் எப்படி வருகிறது, அது மனிதர்களை எரித்து விடுகிறதா, அப்படி என்றால் எலும்புகளாவது மிஞ்சி இருக்க வேண்டுமே என்ற கேள்விகளுக்கு விவியனுக்கு விடை கிடைக்கவில்லை.
இந்த தீவுக்கும், வேற்றுக் கிரகவாசிகளுக்கும் தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் ஆராய்ச்சிகள் சூடு பிடித்துள்ளது.  இங்குள்ள மக்களை வேற்று கிரகவாசிகள் கடத்தி செல்கின்றனர் என்றும், கண்ணுக்குத் தெரியாத சக்கரம் ஒன்று சுழல்கிறது என்றும், மக்கள் காற்றில் கரைகின்றனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் மர்ம முடிச்சுகள் எதுவும் இன்னும் அவிழவில்லை.

Sunday, 29 September 2013

கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளியை பழமை மாறாமல் புனரமைக்க ஜமாத் நிர்வாகிகள் ஆலோசனை !

கீழக்கரையில் பழமை வாய்ந்த தொழுகைப் பள்ளிகளுள் நடுத்தெரு ஜும்மா பள்ளியும் ஒன்றாகும். கீழக்கரை நகரின் நடு நாயகமாக திகழும் இந்த கலை நயமிக்க கல் பள்ளியில் அழகும், கம்பீரமும் நிறைந்த, பூ வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள் பிரதானமாக காணப்படுகிறது. நூற்றாண்டுகளை தாண்டி நிற்கும் இந்த பள்ளியின் பல தூண்களில், தற்போது அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளியின் முகப்பில் இருக்கும் மினராக்களில் வெடிப்புகளும் தென்படுகிறது.


இதனால் நமக்கு கிடைத்த அரிய பொக்கிசமான இந்த பள்ளியை, மிக விரைவில் பழமை மாறாமல் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள, ஜமாத் நிர்வாகிகள் இடையேயான ஆலோசனை மற்றும் கலந்தாய்வு  நிகழ்ச்சி இன்று (29.09.2013) மாலை அஷர் தொழுகைக்குப் பின்னர், ஜும்மா பள்ளி வளாகத்தில் நடை பெற்றது. இதில் தொல்லியல் ஆய்வாளர் டாக்டர் ராஜா முஹம்மது அவர்கள் (சென்னை அருங்காட்சியகத்தின் முன்னாள் துணை இயக்குனர்) கலந்து கொண்டு,புனரமைப்பு செய்வது சம்பந்தமான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். 




இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நடுத் தெரு ஜும்மா பள்ளி மஹல்லியும், கீழக்கரை டவுன் காஜியுமான காஜி. A.M.M.காதர் பக்ஸ் ஹுசைன் சித்தீகி, ஜமாஅத் செயலாளர் ஹபீப் தம்பி, பொருளாளர் ஜமால் யூசுப், முன்னாள் செயலாளர் காதர் செய்யது இபுறாஹீம், ஜமாஅத் அங்கத்தினர்கள் ஜாபர் இபுறாகீம் (ஆனா சீனா), சிராங்கூன் டிராவல்ஸ் ஜுபைர் ஆகியோர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். 

Saturday, 17 August 2013

கீழக்கரை கைராத்துல் ஜலாலியா மேனிலைப் பள்ளியில் நடை பெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சி - கிழக்குத் தெரு ஜமாத்தார்கள் பங்கேற்பு !

கீழக்கரை கிழக்குத் தெரு கைராத்துல் ஜலாலியா மேனிலைப் பள்ளியில் இன்று (15.08.2013), காலை 9 மணியளவில், இந்திய தேசத்தின்  67 வது சுதந்திர தின விழா, பள்ளி வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் கிழக்குத் தெரு ஜமாஅத் அங்கத்தினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

 

இந்த நிகழ்ச்சிக்கு கிழக்குத் தெரு ஜமாத் தலைவர். ஜனாப். ப.அ. சேகு அபூபக்கர் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமையாசிரியர் ஜனாப். A. முஹம்மது மீரா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கைராத்துல் ஜலாலியா பள்ளியின் தாளாளர். பேராசிரியர். டாக்டர். ஜனாப். B.J.சாதிக் அவர்கள், பள்ளியின் கல்விக் குழு உறுப்பினர். ஜனாப். M.M.S.செய்யது இப்ராஹீம் அவர்கள், கல்விக் குழு உறுப்பினர். M.K.M.சுஐபு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். 


மேலும் மாணவிகள் ரோசன் சமீஹா, ஸ்மைலா மற்றும் மாணவர். அஜீத் மணிகண்டன் ஆகியோர்கள் இந்திய சுதந்திர தினம் குறித்து சிறப்பாக பேசினர். முன்னதாக மாணவர்களின் சுதந்திர தின விழா அணி வகுப்பு மரியாதயை பள்ளியின் தாளாளர். பேராசிரியர். டாக்டர். ஜனாப். சாதிக் அவர்கள் ஏற்றுக் கொண்டார். 



   

சமாதனப் புறாக்கள் பறக்கவிடப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளியின் முதுகலை ஆசிரியர் சா. சையது அபுதாகிர் அவர்கள் நன்றியுரை வழங்கினார். சுதந்திர தின விழா நாட்டுப் பண்ணுடன் இனிதே நிறைவடைந்து, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

தகவல்  : கீழக்கரை வரலாற்று ஆய்வாளர். ஆனா.மூனா சுல்தான் அவர்கள்