
இந்திய குடியரசு தலைவர் இன்று காலை டெல்லி பாராளுமன்றத்தில் தொடங்கியுள்ளது.
காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது, ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பி.ஏ.சங்மாவும் போட்டியிடுகின்றனர். இதில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இறுதி நேரத்தில் ஆதரவு தெரிவித்ததால் பிரணாப் முகர்ஜி வெற்றி பெறும் வாய்ப்பு 50% வீதத்திற்கு மேல் உள்ளது.
இந்தியாவில் ஜனாதிபதிக்குரிய அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதும், முக்கியமான தருணங்களில் எடுக்கப்படும் அனைத்து அரசியல் சார்ந்த முடிவுகளுக்கும், ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்படவேண்டிய பாரம்பரியம் நிலவுகிறது.
ஊழல் குற்றச்சாட்டுக்கள், திடிரென மந்தமான பொருளாதார வளர்ச்சி என தொடர்ந்து சரிவை சந்தித்துக்கொண்டிருக்கும் காங்கிரஸுக்கு, இத்தேர்தல் முடிவுகள் சாதகமாக இருந்தால் புதிய உற்சாகம் கிடைக்கும் என திடமாக நம்பப்படுகிறது. எதிர்வரும் 2014 இல் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குடியரசு தலைவர் தேர்தல் வெற்றி, நிச்சயம் அதில் செல்வாக்கு செலுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 22ம் திகதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. வெற்றிபெறுபவர், தற்போது குடியரசு தலைவராக இருக்கும் பிரதீபா பாட்டிலின் பதவியிடத்தை கைப்பற்றுவார். இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவர் எனும் பெருமை பிரதீபாவுக்கு ஏற்கனவே உண்டு.

இந்தியாவில் குடியரசு தலைவர், நேரடியாக பொதுமக்களால் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படாது, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்களிப்பின் மூலம் தெரிவாகிறார்.
பிரணாப் முகர்ஜிக்கு உத்தர பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியும், பீஹாரில் ஐக்கிய ஜனதா தால் கட்சியும், மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளன. இக்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மிக அதிகமென்பதால், முகர்ஜியின் வெற்றி ஓரளவு உறுதியாகியுள்ளது.
வெளி விவகார அமைச்சுப்பதவி, உள்துறை அமைச்சுப்பதவி, பாதுகாப்பு மற்றும் வணிகத்துறை அமைச்சுக்களில் பதவி வகித்தவர் பிரணாப் முகர்ஜி. அரசியலில் 1969ம் ஆண்டு முதன்முறையாக மேல் சபைக்கு தெரிவாகும் முன்னர் ஆசிரியர், ஊடகவியலாளர், சட்டவியலாளராக பணிபுரிந்தவர். 1986ம் ஆண்டு காங்கிரஸுடன் ஏற்பட்ட தகறாரு ஒன்றினால், அங்கிருந்து விலகி புதுக்கட்சி தொடங்கியவர். இரு வருடங்களின் பின்னர் மீண்டும் காங்கிரஸுடன் இணைந்து கொண்டார். பன்னாட்டு நாணய நிதியம் (IMF), உலக வங்கி என்பவற்றிலும் அதிகார குழுவிலும் இடம்பிடித்தவர்.
பி.ஏ.சங்மா, லோக்சபா மற்றும் நாடாளுமன்ற கீழ் சபையின் முன்னாள் சபாநாயகர் ஆவார். வடகிழக்கு மாநிலமான மெகாலாயாவின் முதலமைச்சராக இருந்தவர். அடிப்படையில் ஊடகவியலாளர், சட்டத்துறை ஆய்வாளர், பேச்சாளர். 1980ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர். 1999ம் ஆண்டு உருவான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர்களில் ஒருவராவார்
No comments:
Post a Comment