Thursday, 27 September 2012

ஆண் வாரிசு இல்லாத பெற்றோருக்கு ரூ 500 ஓய்வூதியம்


போபால்: ஆண் வாரிசு இல்லாத தாய், தந்தையருக்கு வயதான காலத்தில் மாதம் தலா ரூ 500  ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் அமைச்சரவை கூட்டம் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் நேற்று நடந்தது. 12வது ஐந்தாண்டு திட்டத்தில் செய்ய வேண்டிய  நல திட்டங்களுக்கு இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. எல்லை பாதுகாப்பு படை தலைமை அலுவலகம் கட்டுவதற்காக 11 ஹெக்டேர் நிலம் ஒதுக்கவும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது தவிர ஆண் குழந்தைகள் இல்லாத தாய், தந்தைய ருக்கு வயதான காலத்தில் மாதம் ^500 ஓய்வூதியம் தனித்தனியாக வழங்கும் சிறப்பு திட்டத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஓய்வூதியம் பெற வருமான வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. வருமான வரி செலுத்தாத, 60 வயது பூர்த்தியடைந்த ஆண் வாரிசு இல்லாத பெற்றோராக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment